510 வாகனங்களை வைத்து இயக்கும் முதலாளி கே.பி.என் !

0
படித்து பட்டங்கள் பல பெற்ற வர்கள் தான் புதுமை யாக சிந்தித்து, தொழிலில் வெற்றி பெற முடியும் என்ப தில்லை.

510 வாகனங்களை வைத்து இயக்கும் முதலாளி கே.பி.என் !
பள்ளிக் கல்வியை முழுமை யாக முடிக்காத வர்கள் கூட வெற்றி கரமான தொழில் முனை வோர்களாக விளங்கு கிறார்கள் என்பதற்கு மற்றொரு உதாரண மாக வலம் வருகிறார் இந்த தொழிலதிபர்.

மூன்று ஆங்கில எழுத்துக் களை சொன்னாலே போதும், தமிழகம் மட்டு மல்ல தென் மாநிலங்  களில் உள்ளமக்களு க்கும் அந்த சொகுசுப் பேருந்துகள் தான் நினை வுக்கு வரும்.
பெண்கள் ஆபாச படம் பார்ப்பதால் என்ன ஆகும்? ஆய்வில் தகவல் !
அந்தப் பேருந்து களை இயக்கும் கே.பி.என். டிராவல்ஸ் அதிபர் கே.பி. நடராஜன், இன்றைய தேதியில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட

ஐந்து மாநிலங் களில் தலா ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள 210 சொகுசு பேருந்து களுக்கு சொந்தக் காரர்.
அதோடு 300 பார்சல் லாரிகளும் நாடு முழுவதும் சுமைகளை ஏற்றி இறக்கி வலம் வந்து கொண்டிரு க்கின்றன.

இவ்வளவு பெரிய போக்கு வரத்து சாம்ராஜ் யத்தை நிறுவி, வெற்றி கரமாக நடத்தி வரும் கே.பி. நடராஜன், பெரிய பிசினஸ் படிப்பு எதுவும் படித்தவர் அல்ல. 

இவர் படித்தது வெறும் ஏழாம் வகுப்பு மட்டும் தான். ஆனால், அடைந்த வெற்றிகள் ஏராளம்.

தனது வெற்றிக் கதையை சொல்கிறார் நடராஜன்....

''நான் பிறந்து வளர்ந்தது சேலம், பெரியபுத்தூர் கிராமம். அப்பா பொன்மலைக் கவுண்டர் நாலரை ஏக்கர் நிலம் வைத்தி ருந்த சாதாரண விவசாயி.

எனக்கு விவசாய த்தில் பெரிய நாட்டம் இல்லை. சிறு வயதில் இருந்தே மோட்டார் தொழிலில் ஈடுபட வேண்டும் என்கிற ஆசை எனக்கு அதிகம்.

510 வாகனங்களை வைத்து இயக்கும் முதலாளி கே.பி.என் !
ஏழாம் வகுப்பு தாண்டி யதும் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தேன். சில வருடங்கள் அப்பாவு க்கு துணை யாக விவசாய வேலை களை செய்தேன்.

ஒரு கட்டத்தில் என்னுடைய மோட்டார் தொழில் கனவு நிறை வேறும் சூழல் ஏற்பட்டது. 1968 ம் வருடம் எனது உறவின ர்கள் சிலருடன் சேர்ந்து பஸ் ஒன்றை வாங்கினேன்.

அதுக்கு 'வெங்கடேஸ்வரா பஸ் சர்வீஸ்' என்று பெயர் வைத்து கோவை டூ பெங்களூரு ட்ரிப் அடித்தேன்.

அந்த ஒற்றைப் பஸ்ஸின் ஓட்டுநரும் நான் தான், கிளீனரும் நான் தான். இப்படி யாக தனி ஒருவனாக பஸ் போக்குவரத்தை நடத்தினேன்.

அடுத்த சில வருடங் களில் பங்குதா ரர்கள் தங்கள் பங்கை பிரித்துக் கொண்டு வேறு தொழில் களுக்கு போய் விட்டார்கள்.

எனக்கு மோட்டார் தொழிலை விட மனதில்லை. என்னிடம் இருப்பில் இருந்த பணம் போத வில்லை.

வெளியில் தெரிந்தவர் களிடம் கொஞ்சம் கடன் வாங்கி 1969 ல் ஒரு புதிய பஸ் ஒன்றை வாங்கினேன்.

 எனது நெருங்கிய உறவினரின் குழந்தை பெயர் சிவக்குமார். அந்த குழந்தை யின் பெயரையே புதிய பஸ் கம்பெனிக்கு வைத்தேன்.

'சிவக்குமார் பஸ் சர்வீஸ்' என்கிற பெயரில் இயங்கிய அந்தப் பஸ்ஸின் டிரை வரும் நான் தான்.
மதுரை டூ பெங்களூரு ரூட்டில் பேருந்தை இயக்கி, அந்த பஸ் கம்பெனியை 3 வருடங் களாக வெற்றி கரமாக நடத் தினேன்.

கிடைத்த லாபத்தில், தொடர்ந்து இன்னொரு பஸ் வாங்கினேன். எனது தாத்தா குப்பண்ண கவுண்டர் பெயரின் முதல் எழுத்தான 'கே' இன்ஷி யலையும்,

எனது தகப்பனார் பொன்மலைக் கவுண்டர் பெயரில் இருந்து 'பி' எழுத்தை யும், என்னோட பெயரில்

இருந்து 'என்' ஆங்கில எழுத்தை யும் எடுத்து இணைத்து, '1972 கே.பி.என்.' என்கிற பெயரை வைத்து, டிராவல்ஸ் கம்பெனி தொடங் கினேன்.

'ஏ.பி.சி 7581' என்கிற ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட அந்த கே.பி.என். டிராவல்ஸ் பஸ், திருநெல்வேலி - பெங்களூரு இடையே இயக்கப் பட்டது.

510 வாகனங்களை வைத்து இயக்கும் முதலாளி கே.பி.என் !
தொடர்ந்து இரண்டு வருடங்கள் நடந்த போக்கு வரத்தை தொடர்ந்து, 1974ம் வருடத் தில், கே.பி.என். டிராவல் ஸின் இரண்டாவது பஸ் இயக்கப் பட்டது.

1976 ல் மூன்றாவது பஸ்ஸை வாங்கினேன். மூன்று பேருந்து களும் லாபகர மாக ஓடின. பயணிகளிடம் நாங்கள் காட்டிய அன்பான அணுகு முறை, சரியான நேரத்தில் புறப்பட்டு ஊரை சென் றடைதல்,

பாது காப்பான பயண த்திற்கு உத்தர வாதம் உள்ளிட்ட விஷயங்களில், எங்கள் கம்பெனி டாப்கியரில் போகத் தொடங் கியது.

இதில் ஒரு விஷேசம் என்ன வென்றால், ஒரு பஸ் மட்டும் இயக்கிய பொழுது, நான் மட்டும் தான் டிரைவர்.

இரண்டாவது பஸ்ஸை ஓட்ட, இன்னொரு டிரைவரை வேலை யில் சேர்த்தேன். படிப்படி யாக கம்பெனி வளர்ந்து, ஒரு கட்டத்தில் 10 வண்டி களுடன் உயர்ந்தது.

அப்படி 10 வண்டி களுக்கு முதலாளி என்கிற அந்தஸ்து கிடைத்த போதும், அதில் ஒரு வண்டியின் டிரை வராக நான்தான் இருந்தேன்.

அடுத் தடுத்து தொலை தூர பயணி களை ஈர்க்கும் விதமாக சொகுசு பஸ்களை அறிமுகம் செய்தேன். குளுகுளு வசதி செய்யப் பட்டதும், சாய்மானம் கொண்ட மெத்தை இருக்கை களை உடைய பஸ்களை வடி வமைத்தோம்.

அவற்றுக்கு பயணி களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாடு மட்டு மின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங் களுக்கும் பல பஸ்களை இயக்கி னோம்.

இந்தியா வில் படுக்கை வசதி கொண்ட தொலைதூர பஸ்ஸை அறிமுகம் செய்தது எங்கள் நிறுவனம் தான்.

இப்போது எங்கள் நிறுவன த்தின் 210 பேருந்து களில், 95 படுக்கை வசதி கொண்ட வை. இன்று நாட்டின் எல்லா நகரங் களிலும் எங்கள் நிறுவன த்திற்கு பதிவுக் கிளைகள் உண்டு.

510 வாகனங்களை வைத்து இயக்கும் முதலாளி கே.பி.என் !
நாட்டின் எந்த மூலை யில் நீங்கள் இருந்தாலும், கே.பி.என். டிராவல் ஸில் பயணம் செய்ய ஆன் லைனில் பதிவு செய்து கொள்ள முடியும்.

ரயில் பயணி களுக்கு ரயிலு க்குள் உணவு கிடைப்பது போல, எங்கள் பஸ்ஸில் பயணிப் பவர்களு க்கு உணவு வழங்கும் திட்ட த்தையும் செயல் படுத்திட உள்ளோம்.

எதிர் காலத்தில் 'கே.பி.என். ஏர்லைன்ஸ்' என்கிற பெயரில் குறைந்த கட்டண த்தில் விமானச் சேவை வழங்கும் ஒரு திட்ட த்தைப் பற்றிய யோச னையும் இருக்கிறது.

ஏழாம் வகுப்பு வரை மட்டும் படித்த நான் 17 வயதில் கிளீனர், 18 வயதில் டிரைவர், 20 வயதில் ஒரு பஸ்ஸின் பங்குதாரர்,

24 வயதில் கே.பி.என். டிராவல்ஸ் என்கிற கம்பெனி யின் முதலாளி என்று படிப் படியாக வளர்ந்து, இன்று 510 வாகனங் களை வைத்து இயக்கி வரு கிறேன்.

நாள் ஒன்றுக்கு ஆயிரக் கணக்கான மக்கள் எங்கள் பஸ்ஸில் பயணிக் கிறார்கள். கோடிக் கணக்கான ருபாய் சரக்குகள் நாடெங் கிலும் எடுத்துச் செல்லப் படுகிறது.

இதை நிர்வாகம் செய்ய, என்னிடம் நூற்றுக் கணக்கான பட்ட தாரிகள் வேலை பார்க்கி றார்கள் என்ற நடராஜன்,

அன்றை க்கு ஏதோ ஒரு ஆர்வத்தில் படிப்பை பாதியில் கை விட்டேன். இன்னும் கூட படித்திரு க்கலாம் என்கிற ஆதங்கம் சிலசமயம் எழுவ துண்டு.
510 வாகனங்களை வைத்து இயக்கும் முதலாளி கே.பி.என் !
இன்று தென் மாநிலங் களுக்கு மட்டும் பஸ் போக்கு வரத்தை நடத்தி வரும் நான், பட்டப் படிப்பை படித்தி ருந்தால், 

இன்னும் நன்றாக பஸ் போக்கு வரத்தை நடத்தி யிருக்கலாம் என்று எப்போ தாவது நினைப்ப துண்டு.

ஆனாலும் வாழ்க்கை யில் தெரிந்து கொண்ட அனுபவக் கல்வி தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது என்பதையும் மறுபதற் கில்லை.'' என சொல்லி முடித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)