தாமஸ் ஆல்வா எடிசன் அறிவியலரிஞர் !

காது கேட்காதவன், மனநலம் பாதிக்கப் பட்டவன் என்று பள்ளியில் இருந்தே துரத்தப்பட்ட தாமஸ் அல்வா எடிசன் தான் இன்றளவும் விஞ்ஞானத்தை கற்பவர்களுக்கு முன்னோடி.
தாமஸ் ஆல்வா எடிசன் அறிவியலரிஞர் !
இவர் ஒலி பெருக்கி, தந்திக்கருவி, மின்சார விளக்கு, மின்சார இயந்திரம், மின்சார இருப்புப் பாதை, தொலை பேசி, கிராமபோன், திரைப்பட ஒளிப் பதிவுக் கருவி (காமிரா) என ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை படைத்தவர். 

சிறு வயதில் மக்கு என்று பள்ளியி லிருந்து வெளியேற்றப்பட்ட எடிசன் தான் இவற்றின் படைப்பாளி. இன்றளவும் பேசப்படும் மிகப்பெரிய விஞ்ஞானி.

அமெரிக்காவில் இரும்புத் தாதுவுக்குத் தேவையும் விலையும் மிக அதிகமாக இருந்ததால், பாறைகளில் இருந்து இரும்புத்தாது பிரித்தெடுக்கும் கண்டு பிடிப்பில், 1897-ம் வருடம் எடிசன் அவரது கண்டு பிடிப்பைச் செயல் படுத்த பெரிய நிறுவனங்கள் முன் வந்தன.

ஆனால், அவற்றை எல்லாம் நிராகரித்து தனது முழு செல்வத்தையும் முதலீடு செய்து சொந்தமாகத் தொழிற் சாலை தொடங்கினார் எடிசன். 
மலை களை உடைக்க, உடைத்த பாறைகளைக் கற்களாக்க, என எல்லா வற்றுக்கும் பெரிய அளவில் இயந்திரங்களை நிறுவி 

ஒரு டன் இரும்புத்தாது ஆறரை டாலருக்கு விற்பனையாகி கொண்டிருந்த நேரத்தில்,  நான்கு டாலர் அடக்க விலையில் எடிசன் உற்பத்தி செய்தார்.
தாமஸ் ஆல்வா எடிசன் அறிவியலரிஞர் !

அவர் விற்பனை தொடங்கிய நேரத்தில் அமெரிக்காவின் மிசாபா மலைப் பகுதிகளில்  உயர்ரக இரும்புத் தாது பெருமளவு இருப்பது கண்டு பிடிக்கப் படவே, இரும்பு விலை மடமடவென ஒரு டன் மூன்று டொலராகக் குறைந்தது.

நஷ்டமடைவது தவிர வேறு வழியில்லை எனத்தெரிய வந்ததும், உடனே தொழிற் சாலைய மூடினார். எடிசனிடம் அவரது நண்பர்கள், 

சிலருடன் கூட்டு சேர்ந்திருந்தால், ஒரேய‌டியாக நஷ்டமடைந்து இருக்க வேண்டிய தில்லையே என்றார்கள்.

நஷ்டம் ஏற்படும் ஒரு வழியைத் தெரிந்து கொண்டது எனக்கு லாபமே! தோல்வி என்பது வீழ்ச்சியல்ல, படிப்பினையே! என்ற படி மீண்டும் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார் எடிசன்.

கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கொங்கிரீட் கலவையைக் கண்டு பிடித்து, உடனே தயாரிப்பில் இறங்கி, மூன்றே வருடங்களில் இழந்த சொத்தை விட அதிகமாகச் சேர்த்தார்.

அமெரிக்கா வில் 1847-ம் வருடம் சாமுவேல் எடிசன் மற்றும் நான்ஸி எலியட் தம்பதி களுக்கு நான் காவது மகனாக, பிறந்தார் தோமஸ் அல்வா எடிசன்.

அருமையான பச்சை பட்டாணி தோசை செய்வது எப்படி?

தலை பெரிதாக இருந்ததால், மண்டு, மூளை வளர்ச்சி குறைந் தவன் மக்கு என ஆசிரியர் மாணவர்கள் என அனைவரும் கிண்டல் செய்யவே, பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு தாயிடமே பாடம் பயிலத் தொடங் கினான் சிறுவன் தாமஸ்.

ஊரில் விளையும் பொருளை புகை வண்டியில் நகரத்துக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து, அங்கிருந்து பத்திரிகைகள் வாங்கி வந்து மற்ற ஸ்டேஷன்களில் விற்பனை செய்து சம்பாதித்தான். 
தாமஸ் ஆல்வா எடிசன் அறிவியலரிஞர் !

உள் நாட்டுப் போர் காரண மாக, பத்திரிகை களுக்கு நல்ல வரேவற்பு இருப்பதை அறிந்து கொண்டான். 

எனவே ரெயில்வெ அதிகாரிகளின் உதவி யுடன் புகை வண்டி யிலேயே இயந்திரத்தை வைத்து, நகரத்துச் செய்திகளை அச்சடித்து வீக்லி ஹெரால்ட் என்று பெயரிட்டு பத்திரிகையை விற்கத் தொடங்கினான்.

ஆசிரியர், அச்சடிப் வர், விற்பனையாளர் என எல்லா வேலையையும் செய்த எடிசனுக்கு அப்போது வயது 15. 

எடிசன் தன் முதல் கண்டு பிடிப்பான வாக்குப் பதிவு இயந்திரம் 1868-ல் பதிவு செய்த அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை.

தந்தி மற்றும் பங்குச் சந்தை சாதனங் களைத் தொடர்ந்து மின்சார விளக்கைக் கண்டு பிடித்ததும், உலகமே இவரைத் கொண் டாடியது. பாடும் மற்றும் பேசும் ஃபோனோ கிராஃப் இயந்திரம் இவரை பெரும் கோடீஸ்வர னாக்கியது.

ஒலியைப் போலவே ஒளியையும் பதிவு செய்ய முடியும் என ‘சினிமாவைக் கண்டு பிடித்ததும், ‘கண்டு பிடிப்பு களின் தந்தை’ எனப் புகழாரம் கிடைத்தது! 
தாமஸ் ஆல்வா எடிசன் அறிவியலரிஞர் !


1914-ம் வருடம் அவரது சோதனைச் சாலையில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களைப் பார்த்து,தீ எவ்வளவு அழகாக எரிகிறது பாருங்கள். 

ரசாயனப் பொருட்களைத் தவறான விகிதத்தில் கலந்து விட்டேன் என்பதை , 67-வது வயதில் எனக்குக் கற்றுக் கொடுத்த இந்த தோல்வியும் எனக்குப் படிப்பி னையே’என்றார்.

உருளைக்கிழங்கு பட்டாணி சாதம் செய்வது எப்படி?

எடிசன் சிரித்த படி.தனது 81-வது வயதில் மரண மடையும் வரை 1,093 கண்டு பிடிப்புக் களை எடிசன் பதிவு செய்ய முடிந்த தற்குக் காரணம், தோல்வி களை வீழ்ச்சி யாகக் கருதாத இவரது தன்மையே!
Tags: