வரி செலுத்த கெடு தவறியவர்கள் என்ன செய்வது?

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய ஜூலை மாதம் 31-ம் தேதி கடைசி நாள் என்பதை, தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 
வரி செலுத்த கெடு தவறியவர்கள் என்ன செய்வது?
நீடித்தது மத்திய அரசு. பான், ஆதார் இணைப்பில் சிக்கல் இருந்ததால், பலரால் கெடு தேதிக்குள் வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாமல் போனது.

இந்தக் கெடு தேதிக்குள் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்யா தவர்கள் நிறையப் பேர் இருக்கவே செய்கி றார்கள். 

சில காரணங்களால் குறித்த தேதியில் தாக்கல் செய்ய முடியவில்லை; எங்களுக்கு ஏதாவது பிரச்னைகள் வருமா என பதற்றத்துடன் சிலர் கேட்கி றார்கள். 

சரியான தேதிக்குள் தாக்கல் செய்யா தவர்களு க்கு என்னெ ன்ன பிரச் னைகள் வரக் கூடும் என்று சென்னை யைச் சேர்ந்த முன்னணி ஆடிட்டர் எஸ்.சதீஷ் குமாரிடம் கேட்டோம்.
 
“வருமான வரிக் கணக்குத் தாக்கல் என்பது அடிப்படை வருமான வரி வரம்பைத் தாண்டிய அனை வரும் கட்டாயம் மேற் கொள்ள வேண்டும். 

போது மான கால அவகாசம் இருந்த போதிலும் எல்லோ ரும் கடைசி நாளில் முண்டி யடித்துக் கொண்டு தாக்கல் செய்ய முயல்வ தால் தான் இணைய தள சர்வர் முடங்கிப் போனது. 

ஆகஸ்ட் 5-ம் தேதி வரை தாக்கல் செய்வ தற்கான கெடு தேதியை நீட்டிக்க காரணம்.
இந்தப் புதிய கெடு தேதியான ஆகஸ்ட் 5-க்குள் வருமான வரிக் கண க்கைத் தாக்கல் செய்யா தவர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய வருமான வரிக்கு வட்டி கட்ட வேண்டி வரும். 

இதற்கு அபராதம் விதிக்க வேண்டு மென்று சட்ட த்தில் சொல்லி இருந் தாலும் கூட, பெரும் பாலான வருமான வரி மதிப்பீட்டு அதி காரிகள் அபராதம் விதிப்ப தில்லை என்பது தான் தற்போது வரை உள்ள நிலை.

ஆனால், அடுத்த நிதியாண்டி லிருந்து கெடு தேதிக் குள் கணக்கு தாக்கல் செய்யா விட்டால் அபராதம் விதிக்க ப்படும் என அறிவிக்கப் பட்டு உள்ளது. 

அதாவது, அபராதம் என்பதை, தாமத மாகத் தாக்கல் செய்வ தற்கான கட்டணம் என்று மாற்ற விருக் கிறார்கள்.

மேலும், கெடு தேதிக் குள் வரு மான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வில்லை எனில், ரிவைஸ்டு ரிட்டர்ன் தாக்கல் செய்ய முடியாது. 
2016-17-ம் நிதி யாண்டுக் கான ரிவைஸ்டு ரிட்டர்னை 2019-ம் ஆண்டு மார்ச் வரை எத்தனை முறை வேண்டு மானாலும் செய்ய முடியும். 

ஆனால், வருமான வரிக் கண க்குத் தாக்கலை, நிர்ண யிக்கப் பட்ட கெடு தேதிக் குள் தாக்கல் செய்யா விட்டால் உங் களால் ரிவைஸ்டு ரிட்டர்ன் தாக்கல் செய்யவே முடியாது.

உங்களுடைய வருமான வரிக் கணக்குத் தாக்கலில் ஏதேனும் வருமானம், வரிச்சலுகை முதலீடு சேர்க்கப் படாமல் விட்டுப் போயிருந்தாலோ, ஏதாவது பிரச்னை இருந்தாலோ அதனை உங்களால் மீண்டும் தாக்கல் செய்ய முடியாது.  

பிசினஸ் செய்ப வர்கள் கெடு தேதிக்குள் தாக்கல் செய்யா விட்டால், பிசினஸில் ஏதேனும் நஷ்டம் இருக்கிறது என் றாலும் அதனை அடுத்த நிதியாண்டுக்கு கேரிஓவர் செய்ய முடியாது.

அதே சமயம், இது வரை வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், 2018 மார்ச் க்குள் வருமான வரி கணக் கைத் தாக்கல் செய்யலாம். 
அபராதம் விதிப்பது அதிகாரிகள் கையில் இருக்கிறது. என்றார் ஆடிட்டர் சதீஷ் குமார். வருமான வரிக் கட்ட வேண் டியது நாம் நாட்டுக்குச் செய்யும் கடமை. 

ஆனால், வரிக்கு வட்டியும் அபரா தமும் சேர்த்துக் கட்டுவது நமக்கு நாமே செய்து கொள்ளும் தீமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த முறை கெடு தேதிக்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறிய வர்கள், அடுத்த ஆண்டி லாவது ஜூலை மாதத் தொடக்க த்திலேயே தாக்கல் செய்ய நடவடி க்கை எடுப்பது அவசியம்.
Tags: