அடிக்கடி கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறும் சிறுநீர் !

மழையும் மப்பும் மந்தாரமுமாக இருக்கும் நாட்களில் வயிற்றிலும் மப்பும் மந்தாரமும் சூழ்ந்து நிற்கும். வயிற்றிலுள்ள கதகதப்பினால் சிறு நீரகங்களின் 
அடிக்கடி கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறும் சிறுநீர் !
உற்பத்திக் கேந்திரங்கள் கட்டுப்பாட்டுடன் இயங்குகின்றன. இந்தக் கதகதப்பு மந்தப்படுவதால், சிறுநீரின் உற்பத்தியானது சிறு நீரகங்களில் அதிகரித்து அடிக்கடி வெளியேறுகிறது. 

அதனால் வயிற்றி லுள்ள மப்பும் மந்தார மும் மாறி அதன் சுறு சுறுப்பு க்கும் சூடான நிலையைப் பெறுவ தற்கும் தக்க உதவி தேவை. 

தீபாவளி லேகிய த்தை இந்தக் கால கட்டங் களில் நம் முன்னோர் தயாரி த்து தினம் காலை யில் சாப்பிட்டு வயிற் றின் மந்த நிலையைப் போக்கி 

சிறு நீரின் அதிக அளவி லான போக்கைக் கட்டுப் படுத்தி னர். நீங் களும் தீபாவளி லேகிய த்தை எளிதாக வீட்டி லேயே தயாரி த்துச் சாப்பிட லாம். இதற்குத் தேவை யானவை:

திப்பிலி 50 கிராம், ஓமம் 50 கிராம், கண்டந்திப்பிலி 50 கிராம், ஏலக்காய் 5 கிராம், ஜாதிக்காய் 5 கிராம், சுக்கு 25 கிராம், மிளகு 25 கிராம், சீரகம் 25 கிராம், கொத்து மல்லி 25 கிராம்.
ஜாதிக்காய், ஏலக்காய் நீங்கலாக மற்றவற்றை வறுத்துக் கொள்ளவும். எல்லா வற்றையும் நன்கு இடித்துச் சூரண மாக்கிக் கொள்ளவும். 

வெல்லம் 300 கிராம் அளவு தண் ணீரில் கரைத்துப் பாகாக்கி அதில் 50 கிராம் நெய் விட்டு இந்தச் சூரணத்தைப் போட்டுக் கிளறி வைத்துக் கொள்ளவும். 

சுமார் 1 -2 டீ ஸ்பூன் அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். மார்கழியும் தையும் ஹேமந்த ருதுவெனப்படும். இவ்விரு மாதங்களில் பனி அதிகமாக உணரப்படும். பொதுவாகவே இக்காலத்தில் இரவு நேரம் அதிகம். 

பகல் நேரம் குறைவு. பகலிலும் பனி வாடை காலை 8-9 மணி வரை யிலும் இருக்கும். மாலை 5 மணியிலிருந்தே பனி வாடை ஏற்பட்டு விடும். 
ஆகவே அதிலிருந்து உடலைக் காப்பாற்றும் கம்பளி முதலிய உடைகளின் கதகதப்பு, தோலின் வறட்சி ஆகியவற்றின் காரணமாக ஜீரண கோசங்களுக்குத் தேவையான சூடு சற்று அதிகமாகவே இருக்கும். 

உணவைச் செரிக்க வைக்க வேண்டிய செயல் சிறு நீரகங்களுக்கு இல்லாத தாலும், சூடு வயிற்றுப் பகுதியில் குவிந் திருப்பதாலும், சிறு நீரகங்கள் வெளியிலுள்ள பனி வாடையால் குளிர்ந் திருக்கும். 
 
இந்தக் குளிர்ச்சியின் தாக்கத்தினால், நீர்ச் சுரப்பு அப்பகுதியில் கூடுகிறது. இதுவே சிறுநீர்ப் பெருக்கு ஏற்படுவதற்குக் காரணமாகிறது.  
 
இந்தக் காலத்தை யொட்டி ஜீரண உறுப்புகளின் நிலைக்கேற்ப அமைந்த உத்தம உணவு பொங்கல். 
 
அதன் செரிமானத்தில், உடல் உட்புற சூட்டைத் தளர்த்தி, எல்லாப் பகுதி களுக்கும் சீராகப் பரப்புவ தால், சிறு நீரகங்க ளுக்குத் தேவை யான சூடு கிடைப் பதால், அதன் செயல் பாடு சீராகி, நீர்ச் சுரப்பைக் கட்டுப் படுத்தும், 

விடியற் காலையி லேயே எழுந்து வெந்நீரில் குளித்து காய்ந்த உடை உடுத்தி வெளிக் குளிரைப் போக்கிக் கொள் வதன் மூல மாகவும், 
சிறுநீர் அதிக அளவில் போவதைத் தடுத்துக் கொள்ளலாம். ஐந்து உரைப்புள்ள பொருட்களாகிய திப்பிலி, கண்டந்திப்பிலி, செவ்வியம், கொடி வேலி வேர்ப்பட்டை, சுக்கு எனும் பஞ்ச கோலம் சேரும் 

இந்த காந்தம் கஷாயத்தைக் காலை, மாலை குடித்து வருவது மிகவும் நல்லது. 15 மி.லி. கஷாயத்தை 60 மி.லி. வெது வெதுப்பான தண்ணீர் கலந்து காலை, மாலை உணவுக்கு 1 மணி நேரம் முன்பாகச் சாப்பிடவும்.
Tags: