அதிகாரம் நிறைந்த பெண்மணி இந்திரா காந்தி !





அதிகாரம் நிறைந்த பெண்மணி இந்திரா காந்தி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
ஒரு அமைதியான பெண்மணியாக அரசியலில் வாழ்வைத் துவங்கி, நாட்டின் அசைக்க முடியாத தலைவராக உயர்ந்து தானே அதை தகர்த்துக் கொண்டு மீண்டும் மீண்டு வந்த வரலாறு இந்திரா வுடையது.
அதிகாரம் நிறைந்த பெண்மணி இந்திரா காந்தி !
விடுதலை போரில் குடும்பமே கலந்து கொண்ட சூழலில் தான் இந்திரா பிறந்தார். 

அப்பாவும், தாத்தாவும் அடிக்கடி சிறைக்கு போவதையும் விடுதலைப் போரில் ஈடுபடும் எண்ணற்றோர் வந்து போவதையும் பார்த்தே அவரின் இளமைக் காலம் நகர்ந்தது. 

கூடவே, அவரே வானர சேனை என்கிற அமைப்பை அமைத்து சிறுவர் களை கொண்டு விடுத லைப் போருக்கு உதவவும் செய்தார். சாந்தி நிகேத னில் பெற்ற கல்வி, நேருவின் கடிதங்கள் அவரை செதுக்கின. 

இந்திராவுக்கு ஜோன் ஆப் ஆர்க் மிகப்பெரிய ஆதர்சம். இந்திரா தன் அன்னை உடல் நலம் இல்லாத பொழுது அவரை கவனிக்க வந்த பெரோஸ் காந்தியுடன் காதல் பூண்டார். 

சில போராட்ட ங்களுக்கு பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டார். விடுதலை பெற்றபின் நேரு இந்தியாவின் பிரதமர் ஆனதும் அவரின் பி.ஏ போலவே இந்திரா பங்காற்றினார். 

பெரோஸ் காந்தி காங்கிரஸ் எம்.பியாக இருந்தாலும் முந்த்ரா ஊழல், காப்பீட்டு ஊழல் என்று ஊழல்களை வெளியே கொண்டு வந்து காங்கிரசுக்கு சிக்கலை உண்டு செய்தார்.
நேருவும் முறையான விசாரனைக்கு உத்தரவிட்டு நடவடிக்கைகள் எடுத்தார். இந்திராவுக்கும், பெரோஸ் காந்திக்கும் இடையே இருந்த விரிசல் ஒட்டுப் படுவதற்கு முன்னமே பெரோஸ் இறந்து போனார். 

கையில் இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். நேருவுடன் இந்திரா தொடர்ந்து செயலாற்றினார். ஒரு முறை அவரை காங்கிரஸ் கட்சி தலைவர் ஆக்கினார் நேரு.

அப்பொழுது ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள கம்யூனிஸ்ட் அரசை கலைக்கச் சொல்லி நேருவை கட்டாயப் படுத்தி அதை சாதிக்கவும் செய்தார். 

நேரு இவரை தனக்கு அடுத்து வாரிசாக ஆக்க எண்ண வில்லை. தன்னுடைய நெருங்கிய தோழிக்கு எழுதிய கடிதத்தில் சீக்கிரம் அமெரிக்காவில் வந்து செட்டில் ஆகலாம் என்று எண்ணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

நேருவின் மறைவுக்கு பின்னர் சாஸ்திரி பிரதமர் ஆனதும் இந்திரா வை மொத்தமாக லண்டனுக்கு தூதுவராக அனுப்பி மொத்தமாக அரசியல் வாழ்வை அஸ்த மித்து விடலாம் என்று எண்ணினார். 

அவர் தாஷ் கண்ட்டில் இறந்து போக, சொன்ன பேச்சை கேட்பார் என்று நம்பி சிண்டிகேட்டின் காமராஜர், நிஜலிங்கப்பா முதலியோர் இந்தி ராவை பிரதமர் ஆக்கினார்கள்

நாடாளு மன்றத்தில் குங்கி குடியா (ஊமை பொம்மை ) என்று லோகியா குறிக்கிற அளவுக்கு ஆரம்ப காலங்களில் திணறிக் கொண்டு தான் இருந்தார் இந்திரா.
சிண்டி கேட்டின் ஆதிக்கம் அவரை வெறுப்பேற்றியது. அவர்களை மீறி ரூபாயின் மதிப்பை குறைத்தார். மொரார்ஜி தேசாயை பதவி இறக்கம் செய்தார். 

ஜனாதிபதி தேர்தலில் ஜகஜீவன் ராமை இவர் ஆதரிக்க போக சிண்டி கேட்டோ இவ ருக்கு தொல்லை தரக் கூடிய சஞ்சீவ ரெட்டியை நிறுத்தியது. 

இவரின் ஆசி பெற்ற சுயேச்சை வேட்பாளர் வி.வி.கிரியை மன சாட்சிப்படி வாக்களி யுங்கள் என்று சொல்லி வெல்ல வைத்தார் இவர். கட்சி உடைந்தது.

பிற கட்சிகளின் உதவி யோடு ஆட்சி செய்து வந்த இந்திரா பின்னர் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்தித்து பெரும் வெற்றி பெற்றார். நேருவின் கால த்தில் இருந்த உட்கட்சி ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்தார். 

அவ ருக்கு ஆமாம் சாமி போடுகிறவர்கள் மட்டுமே முதல்வராக தொடர முடியும் என்கிற நிலை உண்டானது. நகர்வாலா ஊழல் தொடங்கி மாருதி திட்டம் வரை ஊழலின் உருவம் பெருத்துக் கொண்டே போனது.

பொக்ரான் அணு குண்டு வெடிப்பு, பசுமைப் புரட்சி, வங்கதேச உருவாக்கம், வங்கிகள் தேசிய மயமாக்கம் என்று சாதனை களும் இந்திரா செய்தார். 

மாநில அரசுகளை ஒரு வகையான இறுக்கமான சூழலிலேயே இந்திரா தன் காலத்தில் வைத்திருந்தார்.
மொத்தமாக ஒன்பது, பத்து அரசுகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்துகிற அளவுக்கு ஜனநாயகத்தை மறந்தவராக போனார் அவர். உச்சபட்ச சோகம் ராஜ் நாராயண் வழக்கால் வந்தது.

எம்.பி தேர்த லில் வெற்றி பெற்ற இந்திரா, அரசாங்க சம்பளம் பெற்ற அவரின் செயலாளரை தேர்தல் பணிக்கு பயன் படுத்தினார், அனு மதிக்கப் பட்ட உயரத்தை விட அதிகமான உயரத்தில் கூட்டத்தில் பேசினார்,

அரசாங்க நிலத் தில் அமைந்த மேடையை பயன் படுத்தி னார் என்று குற்றச் சாட்டுகள் நிரூ பிக்கப் பட்டு அவரின் தேர்தல் வெற்றி செல்லு படியாகா மல் போனது என்று அலகாபாத் கோர்ட் அறிவி த்தது.

ஏற்க னவே கேசவனந்தா பாரதி வழக்கில் அரசு எண்ணிய மாதிரி அரசிய லமைப்பு சட்டத்தை திருத்த முடி யாது என்று தீர்ப்பு வாசித்து இருந் தார்கள். 

அதனால் மூன்று நீதிப திகள் முன்ன ணியில் இருந்தும் தனக்கு சாதக மாக தீர்ப்பு சொன்ன வரை தலைமை நீதிபதி ஆக்கி நீதித் துறைக்குள் அரசியலை கலந்தார் இந்திரா.

ஊழல் மலிந்து போயி ருந்த குஜராத் மற்றும் பீகார் அரசுக ளுக்கு எதிராக மாண வர்கள் மற்றும் ஜெபி போரா ட்டங்கள் ஆரம்பித்து அசை த்துக் கொண்டு இருந் தார்கள்.
இப்பொழுது அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் உள்நாட்டு கலகம் என்கிற வார்த்தை யின் படி அவசர நிலையை பிரகடனம் செய்தார். எல்லா வகை யான சுதந்திர ங்களும் பிடுங்கப் பட்டன. 

ஒரே நாளில் அரசியல் தலைவர்கள் கைது செய்யப் பட்டார்கள். நாடாளு மன்றம், உச்ச நீதிமன்றம் எல்லாமும் செயலிழந்தது. எழுத்து, பேச்சு சுதந்தி ரங்கள் பறி போயின. சஞ்சய் காந்தி வந்தார்.

பல லட்சம் முஸ்லீம்கள், தலித்துகள் உட்பட்ட எண்ணற்ற எளிய ஏழை மக்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு செய்தார். 

ஊரை அழகாக்குதல் என்று டெல்லியில் பல லட்சம் மக்களை வெளியேற்றி துப்பாக்கி சூட்டில் பல மக்கள் இறக்க நேர்ந்தது. சட்டத்தின் சரத்துகள் திருத்தப் பட்டு இந்திரா வின் வெற்றி செல்லு படியாக்கப் பட்டது. 

பிரதமர் முதலியோரின் தேர்வை கோர்ட் விசாரிக்க முடியாது என்று மாற்றப் பட்டது. இந்த காலத்தில் பேருந்துகள் முதலிய எல்லா சேவைகளும் ஒழுங்காக நடந்தது. 

விலைவாசி குறைந்தது. மக்கள் விதிகளை பின் பற்றினார்கள். என்ன சுதந்திரம் தான் இல்லவே இல்லை.

தேர்தல் களை வென்று விடலாம் என்று நம்பி இந்திரா அறிவி த்தார். அமைதி யாக காத்தி ருந்த மக்கள் மவுனப் புரட்சி செய் தார்கள். ஜெபியின் ஒருங்கி ணைப் பால் இணைந்த ஜனதா கட்சி இவரை,

இவர் கட்சியை தோற் கடித்தது. வனவாசம் போனார். ஷா கமிஷன் அமைக்கப் பட்டு விசாரணை நடந்த பொழுது ரகசிய காப்பு பிரமாணத்தை காரணம் சொல்லி பதில் சொல்ல மறுத்தார்.
ஸ்டாம்பை ஒட்டாமல்,போலீஸ் காவல் கேட்காமல் இவர் மீதான வழக்குகளில் கோட்டை விட் டார்கள். 

காந்தி தேசாயை இந்திரா காத்த தற்கு நன்றிக் கடன் போல மொரார்ஜி தேசாய் இவரை விசாரிக்க தனி நீதி மன்றங்கள் அமைக்க வில்லை. சட்ட திருத்த ங்களை திரும்ப பெற்றார்கள். 

உள்நாட்டு கலகத்தின் போது அவசர நிலை என்பதை ஆயுத புரட்சியின் பொழுது என்று மாற்றினார்கள். இவர்களும் மாநில அரசை கலைத்தார்கள். பதவிக்காக அடித்து கொண்டார்கள். மக்கள் நொந்து போனார்கள்.

மூன்றே வருட இடை வெளியில் மீண்டும் இந்திரா வந்தார். பஞ்சாபில் சிரோன் மணி அகாலி தளத்தை சமாளிக்க ஆதரவளித்த பிந்தரன் வாலே குழு பஞ்சாபைவன் முறை பூமியாக்கி கொண்டிருந்ததது. 
பொற் கோயில் உள்ளே எக்கச்சக்க ஆயுதங்கள், பஞ்சாபில் பெருங் கொலைகள் என்றிருக்க இந்திரா பல்வேறு அமைதி முயற்சிகளுக்கு பிறகு ராணுவத்தை அனுப்பினார். 

போர்க்கள பூமியானது பஞ்சாப். அந்த வன் மத்தோடு அவரின் உயிரை அவரின் காவலாளிகள் பறித்தார்கள். இந்தியாவை கட்டி ஆண்ட ஒரு வரலாறு முடிவுக்கு வந்தது.
Tags: