மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றி கன்னட மொழியில் உருவாகியுள்ள புத்தகம் நேற்று வெளியிடப் பட்டது.
அம்மா ஆதா அம்மு: ஜெயலலிதா (அம்மு என்கிற அம்மா: ஜெயலலிதா)’ என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த புத்தகத்தை கன்னட பத்திரிகையாளர் என்.கே. மோகன் ராம் எழுதியுள்ளார்.
இதில் ஜெயலலிதா குடும்ப பின்னணி, அவர் திரையுலகில் நுழைந்தது, அரசியல் வாழ்க்கை, மரணம் என முழுமையாக எழுதப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வின் பூர்விகம் மற்றும் பெற்றோர் குறித்து வெளிவராத பல தகவல் கள் இந்த புத்தகத்தில் இடம் பெறுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் புத்தகம் நேற்று கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட உள்ளதாக மோகன் ராம் கூறியுள்ளார்