மீன் தண்ணீர் குடிக்குமா? தெரியுமா உங்களுக்கு?

அது நன்னீர் மீனா அல்லது கடல்நீர் மீனா என்பதைப் பொறுத்து. மீன் தனது உடலில் உள்ள உப்பின் அடர்த்தியை சமநிலை செய்திட தண்ணீர் அருந்துவதும் அருந்தாமல் இருப்பதும் நிகழ்கின்றது.
மீன் தண்ணீர் குடிக்குமா? தெரியுமா உங்களுக்கு?
கடல்நீர் மீன் தண்ணீர் அருந்தும். மேலும், அதற்குமுன் சவ்வூடு பரவல் என்றால் என்ன வென்று ஒரு சிறு பார்வை பார்த்து விடுவோம்.

செறிவு குறைந்த கரைசல் ஒன்றிலிருந்து செறிவு கூடிய கரைசல் ஒன்றிற்கு தேர்ந்து உட்புக விடும்.

மென்சவ்வு (Semi-ermiable Membrane) ஒன்றின் மூலமாக நீர் மூலக்கூறுகள் பரவுவது சவ்வூடு பரவல் என்று சொல்லப்படும்.

பொதுவாக தாவரங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சவ்வூடு நெறிப் படுத்தல் (Osmoregulation) முறையைக் கையாளுகின்றன. 

நீர்வாழ் உயிரினங்களில் மெல்லு டலிகள் அதாவது முதுகெலும்பு இல்லா தவைகள் சவ்வூடு உடன்படுத்திகள் (Osmoconformers) ஆகும். 

இவைகள் சுற்றுப்புற நீருக்கு ஏற்றவாரு தன் உடற்பொருட்களில் மாற்றத் தினைக் கொண்டி ருக்கும்.

பெரும்பாலான முதுகெலும்பு உள்ள நீர்வாழ் உயிரினங்கள் சவ்வூடு நெறிப் படுத்திகள் (Osmoregulators) ஆகும்.அதாவது, இவைகள் சூழலுக்குத் தகுந்த வாறு அவ்வப் போது தம்மை சமன் செய்து கொண்டே இருக்கும்.
மீன்களின் தோல் மூலமாக சவ்வூடு பரவல் முறையில் தண்ணீர் அதன் உடலுக் குள் செல்லும். நன்னீர் மீனின் உடலில் உள்ள உப்பானது வெளியே உள்ள தண்ணீரின் உப்பை விட அடர்த்தி யானது. 

எனவே, அதனை வெளிப்புற நீரின் உப்பின் அடர்த்தி யோடு சமநிலைப் படுத்த, தனக்குள் வரும் அதிகப் படியான நீர் தன் உடலின் உப்பின் அடர்த்தியைக் குறைத்து விடாமல், அந்நீரைச் சிறுநீராக வெளியேற்றி விடும். 

அதற்காக அதன் சிறு நீரகங்கள் சற்று அதிகப் படியான பணியை மேற் கொள்ளும்.

கடல்நீர் மீனின் உடலில் உள்ள உப்பானது வெளியே உள்ள தண்ணீ ரின் உப்பை விட அடர்த்தி குறை வானது. எனவே வெளிப்புற நீரின் உப்பின் அடர்த்தி யோடு சம நிலைப் படுத்த தன் உடலில் இருந்து

அதிகப் படியான நீர் வெளியேறி விடுவ தால், தன் வாய் வழியாகவும் உப்பு நீரை உட்கொள்ளும். அச்சமயம் தன் அந்நீரின் வாயிலாக வரும அதிகப் படியான உப்பை தன் செவுள் களின் மூலமாக வெளியேற்றி விடும்.

மீன்கள் தண்ணீரில் எப்படி சுவாசிக் கின்றன?
மீன்களும் உயிர்வாழ ஆக்சிஜன் தேவை. தண்ணீர் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளால் அமைந்து இருந்தாலும், அதனைப் பிரித்து ஆக்சி ஜனை உட்கொள்ள முடியாது. 

பின் எப்படி அவற் றிற்கு தண்ணீரில் இருந்து ஆக்சிஜன் கிடைக் கின்றது? நீரில் நுண்ணிய காற்றுக் குமிழிகள் கரைந்தே இருக்கும். 

தண்ணீர் கலக்கப்படும் போதும், நீர்த்தா வரங்கள் மூலமாகவும் அவ்வாறு நீரில் நுண்ணிய காற்றுக் குமிழிகள் கரைந்து கலக்கப்படும். அந்தக் காற்றி லிருந்து தான் ஆக்சிஜனைப் பெற்றுக் கொள்கின்றன.

அதாவது, கடல்நீர் மீன்களின் வாய் வழியே உட் செல்லும் நீரானது சற்றே அழுத்த த்துடன் செவுள் களுக்குள் செலுத்த ப்படும். 

செவுள் களில் இருக்கும் நுண்ணிய துளைகள் வழியாக அந்நீரில் உள்ள ஆக்சிஜன் உறிஞ்சப் பட்டு இரத்தத் துடன் கலக்கப் படுகின்றது. 
மீதமுள்ள நீர் செவுள் களின் வழியே வெளித் தள்ளப்படு கின்றது. நன்னீர் மீன்கள் செவுள் களின் வழியாகவே நீரை உள்வாங்கி சுவாசித்து வெளித்தள்ளு கின்றன.
Tags: