ஜெயலலிதா உள்ளிட்டோரின் 68 சொத்துகள் பறிமுதல் !





ஜெயலலிதா உள்ளிட்டோரின் 68 சொத்துகள் பறிமுதல் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மேலும் 3 பேர் தங்களது வருமானத்துக்கு அதிகமாக சேர்த்து வைத்த சொத்துகள் 68ஐ பறிமுதல் செய்யும் நடவடிக்கையை நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு தொடங்கி யுள்ளது.
தமிழக முதலமைச் சராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 

அதைத் தொடர்ந்து 4 ஆண்டு சிறைத் தண்டனை, அபராதம் மற்றும் சொத்துகள் பறிமுதல் ஆகியவை உறுதி செய்யப் பட்டன. 

ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டனர். 

இதன் பின்னர் தற்போது நீதிமன்ற உத்தரவுப் படி, ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேரின் சொத்துகளை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தொடங்கி யுள்ளனர். 

இதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதன் படி, இவர்கள் நால்வரும் வருமானத்துக்கு அதிகமாக வாங்கியதாக வழக்கில் காட்டப் பட்டுள்ள சொத்துகள் அமைந்துள்ள, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர் களுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்பு போலீசார் கடிதம் எழுதி யுள்ளனர். 

அதில், அந்த சொத்து களை ஆட்சியர் கள் தங்கள் அதிகாரத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித் துள்ளனர்.
இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்பு இயக்கக அதிகாரி கூறியவை…

6 மாவட்ட ங்களிலும் இருக்கும் அந்த சொத்துகள் கோடிக் கணக்கில் மதிப்பு கொண்டவை. 

அந்த சொத்து களை அல்லது நிலங்களை அடை யாளம் கண்ட பிறகு வருவாய்த் துறை அதிகாரிகள் அந்த இடங்களில் அறிவிப்பு பலகைகளை வைப்பார்கள். 

அதில், இந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தம் என்று எழுதப்பட்டு இருக்கும். மேலும், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அரசால் முடக்கி வைக்கப் பட்டுள்ள சொத்துகள் தொடர்பான எந்த விதமான பரிவர்த் தனைகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று பதிவுத் துறைக்கு கடிதம் எழுதுவோம். 

அந்த வழக்கு தொடர்பாக 128 சொத்து களை முடக்கு வதற்கு உத்தர விடப்பட்டு இருந் தாலும், 68 சொத்துகளை மட்டுமே பறிமுதல் செய்ய பெங்களூரு தனிநீதி மன்றம் உத்தர விட்டுள்ளது.

அந்தச் சொத்து களில் பெரும் பாலானவை சென்னை, காஞ்சீபுரம் மற்றும் சில மாவட்ட ங்களில் உள்ளன. 

இந்த சொத்து களின் விற்பனை விலை, 20 ஆண்டு களுக்கு முன்பிருந்த வழிகாட்டி மதிப்பு விலைக்கு இணையாக குறிப்பிடப் பட்டுள்ளது. 

ஆனால் தற்போதுள்ள சந்தை மதிப்பு பலமடங்கு அதிகரித்து விட்டது. இந்த சொத்துகளுக்கு தமிழக அரசு தான் இனி உரிமை யாளர். 

அவற்றை அதிகார பூர்வமாக பயன்படுத்தவும் அல்லது பொது ஏலத்துக்கு விடவும் அரசால் முடியும்.
இந்த வழக்கின் தொடக்க கால கட்டத்தில், அதாவது 1991-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலா விடம் ரூ.2.01 கோடி மதிப்புள்ள சொத்துகள் மட்டுமே இருந்தன. 

அதற்குப் பிறகு, அதாவது ஜெயலலிதா முதல்வராக இருந்த கால கட்டத்தில் சொத்துகள் வாங்கி யதன் வளர்ச்சி திடீர் வேக மெடுத்தது. 

அரசு பொது ஊழியராக இருந்த ஜெயலலிதாவும், மற்றவர் களும் 1991 முதல் 1996 வரையிலான 5 ஆண்டுகளுக்குள் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி மதிப்புள்ள சொத்துகளை வாங்கிக் குவித்தனர் என்பது ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்பு போலீசாரின் குற்றச் சாட்டு. 

ஆனால் இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு தனி நீதிமன்றம் வருமான த்துக்கு அதிகமாக அவர்கள் ரூ.53.60 கோடி மதிப்புள்ள சொத்துகளைச் சேர்த்ததாக கணக்கிட்டு தீர்ப்பளித்தது. 

அந்த வழக்கில் ஜெயலலி தாவுக்கு ரூ.100 கோடியும் மற்ற 3 பேருக்கு தலா ரூ.10 கோடியும் தண்டனையாக விதிக்கப் பட்டது… என்றார் அவர்.

இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரது பெயரில் பதிவு செய்யப் பட்ட நிறுவன ங்களின் விவரம்:-
1. ஜெ. பார்ம் அவுஸ்

2. ஜெ.எஸ். அவுசிங் டெவலப் மெண்ட்

3. ஜெ ரியல் எஸ்டேட்

4. ஜெயா கான்ட் ராக்டர்ஸ் அண்டு பில்டர்ஸ்

5. ஜெ.எஸ். லீசிங் அண்டு மெயின்டனன்ஸ்

6. கிரீன் பார்ம் அவுஸ்

7. மெட்டல் கிங்

8. சூப்பர் டூப்பர் டி.வி. பிரைவெட் லிமிடட்

9. ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடட்

10. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடட்

11. சிக்னோரா பிசினஸ் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடட்

12. லெக்ஸ் பிராப்பர்டிஸ் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடட்.

13. ரிவர்வே அக்ரோ புரொடக்ட் பிரைவேட் லிமிடட்.

14. மிடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடட்

15. இந்தோ தோகா கெமிகல்ஸ் அண்டு பார்மசூட்டிகல்ஸ்

16. ஏ.பி. அட்வடைசிங் சர்வீசஸ்

17. விக்னேஸ்வரா பில்டர்ஸ்.

18. லட்சுமி கன்ஸ்ட்ரக்சன்.

19. கோபால் பிரமோட்டர்ஸ்.

20. சக்தி கன்ஸ்ட்ரக்சன்.

21. நமச்சிவாய அவுசிங் டெவலப்மென்ட்.

22. அய்யப்பா பிராபர்டிஸ் டெவலப்மென்ட்ஸ்

23. சீ என்கிளேவ்

24. நவசக்தி கான்ட்ராக்டர்ஸ் அண்டு பில்டர்ஸ்

25. ஓசானிக் கன்ஸ்ட்ரக்சன்.

26. கிரீன் கார்டன் அபார்ட்மென்ட்ஸ்

27. மார்பில் மார்வெல்ஸ்

28. வினோத் வீடியோ விஷன்

29. பேக்ஸ் யுனிவெர்சல்

30. பிரஸ் மஷ்ரூம்ஸ்

31. கோடநாடு டீ எஸ்டேட்
இந்த நிறுவன ங்கள் பெயரில் வாங்கப் பட்ட நிலங்கள், சொகுசு பஸ், கைக் கடிகார ங்கள், தங்க-வைர நகைகள் கையகப் படுத்தப்படும் என்று தெரிகிறது. ஜெயலலிதா பெயரில் 1992-ம் ஆண்டு 

மயிலாப் பூரில் வாங்கப் பட்ட 1,407 சதுர அடி நிலத்துடன் கூடிய கட்டிடம், சசிகலா பெயரில் மன்னார்குடியில் 25 ஆயிரத்து 35 சதுர அடி நிலத்துடன் கூடிய கட்டிடம்,

திருவள்ளூர் மாவட்டம், வேலகாபுரம் கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் நிலம், பையனூர் கிராமத்தில் சுமார் 25 ஏக்கர் நிலம், ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதா ரர்களாக உள்ள 

ஜெயா பப்ளிகேசன் நிறுவன த்தின் பெயரில் சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற் பேட்டையில் கட்டிடத் துடன் கூடிய 4,664 சதுர அடி நிலம், ஆலந்தூர்,

அடையார், சைதாப் பேட்டையில் 55 கிரவுண்ட் நிலம், மயிலாப்பூர் லஸ் சர்ச் ரோட்டில் 10 கிரவுண்ட் நிலம், சசி எண்டர் பிரைசஸ் நிறுவனத்துக்கு நுங்கம் பாக்கம், 

காதர் நவாஸ்கான் சாலையில் 11 கிரவுண்ட் நிலம், ஆலத் தூரில் 0.63 ஏக்கர் நிலம், கிழக்கு அபிராம புரத்தில் 3,400 சதுர அடி நிலம் ஆகியவை வாங்கப் பட்டு உள்ளன.

இளவரசிக்கு நீலாங்க ரையில் 4,802 சதுர அடி நிலம், சிறுதாவூரில் 22 ஏக்கர் நிலம், மயிலாப்பூர், லஸ் அவின்யூவில் ஒரு கிரவுண்ட் நிலம், இவரது மகன் விவேக்கிற்கு சிறுதாவூரில் 1½ ஏக்கர் நிலம், 

கருங்குழி பள்ளம் கிராமத்தில் 16 ஏக்கர் நிலம், வி.என்.சுதாகர னுக்கு சிறு தாவூரில் 29 ஏக்கர் நிலம், சோழிங்க நல்லூரில் 16 சென்ட் நிலம் ஆகியவை உள்ளன.
இது தவிர சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது பெயரில் நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் தேயிலை தொழிற் சாலை யுடன் கூடிய 900 ஏக்கர் நிலம் உள்ளது.  

இந்த 3 பேரும் பங்கு தாரர்களாக உள்ள ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடட், சிக்னோரா பிசினஸ் எண்டர் பிரைசஸ் பிரைவேட் லிமிடட்,  லெக்ஸ் பிராப்பர்டிஸ் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடட், 

ரிவர்வே அக்ரோ புரொடக் பிரைவேட் லிமிடட், மிடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடட் உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் 

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, நீலகிரி உள்பட 6 மாவட்டங் களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.

அதே போல, போயஸ் கார்டனில் போலீசார் நடத்திய சோதனையில் சிக்கிய பல பெட்டிகள் கொண்ட நகைகள் தற்போது சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் உள்ளது. 
அதில், ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் வழங்கிய 191.47 கிராம் எடைகொண்ட தங்கப்படகு, ஒரு கட்சி தொண்டர் கொடுத்த 191.62 கிராம் எடை கொண்ட தங்கத்தால் ஆன செங்கோல் உள்பட 

பல ஆயிரம் கிராம்கள் தங்க நகைகள், வைர மோதிரம், வளையல், கம்மல், தங்க வாள், தங்க முலாம் பூசப்பட்ட கைக் கடிகாரங்கள் உள்ளன.
Tags: