உங்களுக்கு தொழுகை நடக்கும் முன் தொழுதிடுங்கள் | Before you pray the prayer !

மனித படைப்பின் நோக்கத்தை அறிந் திடுங்கள்.. படைத்த இறைவனு க்கு நன்றியை செலுத் திடுங்கள்..


குறித்த நேரத்தில் தொழுகையை நிறை வேற்றிடுங்கள்.. இறைவனை எப்போதும் நினைவு கூர்ந்தி டுங்கள்..

எல்லாத் தொழுகை களையும் பேணி தொழுதிடுங்கள்.. போர்க் களத்திலும் தொழுகையை நிலை நிறுத்திடுங்கள்..

தொழுகை யினால் ஏற்படும் பயன்களை அறிந்திடுங்கள்.. உள்ளச் சத்துடன் உரியநேரத்தில் தொழுகையை நிறை வேற்றிடுங்கள்..

தொழுகையை பேணினால் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும்.. ஜன்னத்துல் ஃபிர்தௌஸில் நிரந்தரமாக தங்க முடியும்..

மறுமையில் முதல் விசாரணை தொழுகையை பற்றியதே.. தொழுகை நம் ஈமானை மேலும் உறுதி யாக்குகிறதே..

தொழுகை பாவக் கறைகளை போக்கிடுமே.. மானக் கேடான வற்றிலிருந்து நமை காத்திடுமே..

தொழுகை தீய காரியங் களை களைந்திடுமே.. இறைவனின் மன்னிப்பை பெற்று தந்திடுமே..

இறுதி தீர்ப்பு நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமைந்திடுமே..

நமை எல்லாம் மார்க்கச் சகோதரர்கள் ஆக்கிடுமே..

தொழுகையை விடுவது இணைவைப் போரில் ஒருவராய் நமை ஆக்கி விடும்..

ஸகர் நரகத்தில் நமை நுழையச் செய்து விடும்..

தொழுகையை விடுவோர் இறை நிராகரிப் பாளாராக ஆகிவிடுவர்.. மறுமையில்  ஃபிர்அவ்ன், ஹாமான் போன்றோரோடு எழுப்பப் படுவர்..

தொழுகை யின் அழைப்பை விளை யாட்டாக எண்ணாதீர்.. அறிவில்லாத மக்களில் ஒருவராக நீங்கள் ஆகிவிடாதீர்..

தொழுகையை விடுவதால் ஏற்படும் விளைவு களை அறிந்திடுங்கள்.. மனம் வருந்தி ஏக இறையிடம் பாவமன்னிப்பு தேடிடுங்கள்..

தொழுகை இறை நம்பிக்கை யாளருக்கு கடமையாகும்.. அல்லாஹ் விற்கு இது மிக விருப்ப மான செயலாகும்..

வாருங்கள் சகோதரர்களே.. தொழுதிடுவோம்.. மார்க்க கடமை யினைப் பேணி நடந்தி டுவோம்..

நமக்கு தொழுகை நடக்கும் முன் நாம் தொழு திடுவோம். நரகத்தி லிருந்து நம்மை காத்தி டுவோம்.
Tags: