விண்வெளியில் கீரையை ருசிக்கும் விஞ்ஞானிகள் !

விண்வெளியில் வளர்க்கப்பட்ட கீரையை நாசா விஞ்ஞானிகள் சுவைக்க உள்ளனர். கீரை வகையை நாசா விஞ்ஞானிகள் உட்பட 44 பேர் கொண்ட சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் குழு பங்கு போட்டு உண்ண உள்ளது.
விண்வெளியில் கீரையை ருசிக்கும் விஞ்ஞானிகள் !
சிட்ரிக் அமிலத்தை கொண்டு கீரையை சுத்தப்படுத்தி அதனை விஞ்ஞானிகள் உண்பார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது. கீரையின் மிச்சம் உறைய வைக்கப்பட்டு பின்னர் பூமிக்கு கொண்டு வரப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. 

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடம் அமைத்து வருகின்றனர். 

அதில் பணிபுரிய பூமியில் இருந்து விண்வெளி வீரர்கள் சென்று வருகின்றனர். விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு விசேஷமாக தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப் படுகிறது. 
ஒருவரது உணவுக்கு ரூ.6 லட்சம் வரை செலவாகிறது. எனவே, செலவை குறைக்கும் வகையிலும் புதிய முயற்சியாகவும், வீரர்களின் உணவுக்கு பூமியில் இருந்து 380 கி.மீ. தூரத்தில் உள்ள 
விஞ்ஞான முறையில் விஷங்களாகும் பழங்கள்
விண்வெளியில் பண்ணை அமைத்து அதில் கீரை வகைகளை பயிரிட நாசா மையம் திட்டமிட்டது.  இந்த முயற்சி முதன்முதலாக கடந்த 2014ல் மேற்கொள்ளப்பட்டது. 

சர்வதேச விண்வெளி ஆய்வு மைத்தில் 33 நாட்களில் வளர்க்கப்பட்ட கீரை பின்னர் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி ஆய்வு மையத்துக்கு கொண்டுவரப்பட்டு உணவுத் தர ஆய்வுக்கு உட்படுத்தியது. 
விண்வெளியில் கீரையை ருசிக்கும் விஞ்ஞானிகள் !
அந்த வகையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்ந்திருக்கும் கீரையை விஞ்ஞானிகள் குழு உண்ணத் தயாராக இருக்கிறது. வெஜ்- 01 என பெயரிடப்பட்ட கீரை வளர்ப்பு முறை பிரதியேகமாக 33 நாட்களில் மேற்கொள்ளப் பட்டது. 
முன்னதாக இதே முயற்சி கடந்த 2010ம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்டது. அடுத்த கட்டமாக காய்கறி களையும் விண்வெளியில் விஞ்ஞானிகள் விளைய வைக்க உள்ளனர்.
Tags: