வினை விதைத்தவன் வினை அறுப்பான் !

பல குடும்ப ங்கள் ஊரை காலி செய்து விட்டு நகரத்தார் வாகனங் களுக்கு ரோடு போட சாலை யோரமாய் குடிபெயர்ந்து விட்டார்கள்!
ஊரை விட்டு பிரிய மனமில் லாமல் ஊரோடு ஒட்டிக் கொண்ட ஒரு சில குடும்ப ங்களில் ராமசா மியின் குடும்பமும் ஒன்று!

ராமசா மிக்கு மூன்று பிள்ளைகள்! இது தவிர ஒரு ஒரு தாய் ஆடும் இரண்டு ஆட்டுக் குட்டிகளும் இருக்கி ன்றன, அதோடு நான்கு முருங்கை மரங்களும் இருக்கி ன்றன! 
ஆடும் குட்டி களும் வருடாந்திர செலவுக ளுக்கும், முருங்கை மரங்கள் வாராந்திர செலவுக ளுக்கும் உதவு கின்றன! 

சீசன் வரும் போது ஐந்து கிலோ பத்து கிலோ என்று காய்க்கின்ற முருங் கைகள் மற்ற நாட்களில் ஒரு கிலோ இரண்டு கிலோவோடு நிறுத்திக் கொள்ளும்!

எவ்வளவு வந்தாலும் பையில் நிரப்பி தோளில் வைத்துக் கொண்டால் ஒன்பது கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் 

டவுன் வரை நடந்து சென்றே ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்று விட்டு வருவது ராமசாமி யின் வழக்கம்!

முருங்கை காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவை யான பொரு ட்களை வாங்கி வருவார்!
ராமசாமி கொண்டு வரும் முருங்கைக் காயின் சுவை அந்த பகுதி மக்களி டையே மிகவும் பிரபலம்! 
இதை பயன் படுத்தி மற்ற முருங்கைக் காயோடு கலந்து மளிகை கடைக் காரரும் நல்ல லாபம் சம்பா தித்து விடுவார்!

பல வருடமாக ராமசாமி முருங்கை க்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக் காரர் அதை எடை போட்டு பார்த்த தில்லை, 

ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட் களை கொடுத்து அனுப்பு வார்! 

காரணம் ராமசாமி யின் நேர்மையும் நாணய மும் எல்லோரும் அறிந்தது. ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக் காயை கொடுத்து விட்டு அதற்கான பொருட் களை வாங்கிச் செல்ல, 

சிறிது நேரத்தில் பத்து கிலோ முருங்கை க்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல் காரர் வந்து கேட்க, அவருக் காக மளிகைக் காரர் எடைபோட அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது!
அன்று முழுவதும் மளிகை காரருக்கு தூக்கமே வரவில்லை! ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்தி ருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோக த்தை செய்து விட்டாரே,
இத்தனை வருடங் களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக் காயை வாங்கி ஏமாந்து விட்டோமே, 

அடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக் கூடாது என்று கடுங் கோபத்தில் இருந்தார்! நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷ மாக வந்தார்! 

நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்தி ருந்தார்! கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று, 

எத்தனை கிலோ என்று மளிகைக் காரர் கேட்க பத்து கிலோ என்றார்! அவர் முன்னா லேயே எடை போட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது, 

வந்த கோபத்தில் மளிகைக் காரர் பளார் என ராமசாமி யின் கன்னத்தில் அறைந்தார்! 
இத்தனை வருஷமா இப்படித் தான் ஏமாத்திட்டு இருக்கியா, கிராமத்துக் காரங்க ஏமாத்த மாட்டாங் கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங் கினேன், 
இப்படி துரோகம் பண்ணி ட்டியே சீய் என துப்ப, நிலை குலைந்து போன ராமசாமி, அய்யா மன்னி ச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக் கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்ல, ஒவ்வொரு முறையும்

நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக் காயையும் வச்சி

தான் எடைபோட்டு கொண்டு வருவேன் இதை தவிர வேற எதுவும் தெரியாது ங்கய்யா, என்று காலை பிடித்து அழ,

மளிகைக் காரருக்கு செருப் பால் அடித்தது போல் இருந்தது! தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்!
இத்தனை வருடங் களாக ராமசாமி யை ஏமாற்ற நினைத்த மளிகைக் காரரும் அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டு தான் இருந்தி ருக்கிறார் என்பது தெளி வானது!
இது தான் உலகநியதி!

நாம் எதை தருகி றோமோ அது தான் நமக்கு திரும்ப வரும் நல்லதை தந்தால் நல்லது வரும், தீமையை தந்தால் தீமை வரும்! வருகின்ற காலங்கள் வேண்டு மானால் தாமதமா கலாம்,

ஆனால் நிச்சயம் வரும்! ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம்!

கதை தான் என்றாலும், காலத்தி ற்கேற்றது என்பதால் பகிர்ந்து ள்ளேன்.
Tags: