இசை புயல் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் | Music Storm Oscar Rahman !

ஏ.ஆர்.ரஹ் மான், 1966 ஜனவரி 6-ல் சென்னை யில் பிறந்தார். இவரின் அப்பா சேகர், பல்வேறு மலையாள, தமிழ்ப் படங் களின் இசைக் குழுவில் பணி புரிந்து இருக்கிறார். ரொம்பக் குட்டிப் பைய னாக இருக்கும் பொழுதே, 
அப்பாவின் அருகில் உட்கார்ந்து இசைக் கருவிகள் மற்றும் இசை அமைக்கும் விதம் ஆகிய வற்றை அறிந்து கொண்டவர் ஏ.ஆர். ரஹ்மான். அப்போது அவர் பெயர் திலீப் குமார்..

அப்பா தனியாக இசை அமைத்த முதல் மலை யாளப் படம் வெளிவந்த நாளிலே, உடல் நலக் குறைவால் மரண மடைந்தார். குடும்ப த்தைக் காக்க, பள்ளிப் படிப்பை பாதியில் முடித்துக் கொண்டு, முழு நேரம் இசை உலகி ற்குள் நுழைந்தார் ரஹ்மான்.

எலெக்ட் ரானிக் பொருட்க ளின் மீது விருப்பம் அதிகம். கணினி பொறியியல் படிக்க வேண்டும் என்பது இளமைக் கால ஆசை.

பள்ளிக் கல்வி இல்லா மல் போனாலும், தனது இசைப் புலமை யால்... லண்டன் இசைக் கல்லூரி யான டிரினிட்டி கல்லூரி யின் ஸ்காலர் ஷிப் பெற்றார்.

ஆரம்ப காலங் களில் எதிர் காலம் எப்படி யிருக்கும் என்று தெரியாத காலங் களில் கார் ஒட்டவும் கற்றுக் கொண்டார். ஒரு வேலை இசை கை கொடுக்கா விட்டால் டிரைவர் ஆகி விடலாம் என்கிற எண்ணம் தான் காரணம்.

"பன்னி ரெண்டு வயதில் முதுமை யடைந்து விட்டேன் நான் ; இப்பொழுது தான் இளைஞ னாகிக் கொண்டிரு க்கிறேன் !" என்று பொறுப்புகள் அழுத்திய இளமைக் காலத்தை பற்றி குறிப் பிட்டார்

ஒரு லட்சம் பேர் கொல்கத் தாவில் இவரின் இசை நிகழ்வை காணக் கூடினார்கள். ரங்கீலா படத்தில் இசை யமைத்த பொழுது தமிழர்கள் ஹிந்தி யில் கோலோச்ச முடியாது என்பதை உடைத்து இவர் பெயர் வந்தாலே கைதட்டி கூத்தாடு கிற மாயத்தை அங்கே செய்தது அவரின் இசை.

இளம் வயதில் 'சினிமா பாரடைஸோ’ படத்தைப் பார்த்து, அந்தப் படத்தின் இசையைப் போல ஒரே ஒரு படத்திற் காவது இசை அமைக்க வேண்டும் என ஆசைப் பட்டார் ஏ.ஆர். ரஹ்மான்.

பி.எம். டபிள்யு கார்களில் விருப்பம் உண்டு. இசையமைப் பதை தாண்டி வீடியோ கேம்ஸ் களில் ஆர்வம் அதிகம்.

தொலைக் காட்சி விளம்பரப் படங் களுக்கு இசை அமைக்க ஆரம்பித்தார். அப்போது தான், இயக்குனர் மணி ரத்னம் மூலம் 'ரோஜா’ பட  வாய்ப்பு வந்தது. 

அதற்காகக் கிடைத்த சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அந்த பண த்தை சில மணி நேரங் களில் விளம்ப ரங்களில் ரஹ்மானால் சம்பாதித் திருக்க முடியும் என்றா லும் அற்புதமான வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டார்.

சின்ன சின்ன ஆசை பாடலை இசை யமைத்து அன்னை யிடம் போட்டு காண் பித்தார். அவர் கண்ணீர் விட்டு அழுதார் ,"பிடிக் கலையா அம்மா ?" என்று கேட்டார் ரஹ்மான்.
பிடிக்க லையா அம்மா ?” என்று ரஹ்மான் அதிர்ந்து கேட்க ,”ரொம்ப நல்லா இருக்கு, என்னமோ பண்ணுது இந்த பாட்டு என்னை எல்லாரு க்கும் இது பிடிக்கும் பாரு கண்டிப்பா !”என்று சொன்னார் அவரின் அம்மா

"காதல் ரோஜாவே பாட்டை அதி காலை மூன்று மணிக்கு கேட்டு விட்டு சவுண்ட் இன்ஜினியர் கண்ணீர் விட்டு அழுதது மறக்கவே முடியாத அனுபவம் " என்றும் பதிவு செய்திரு க்கிறார்.

ரோஜா’ படத்துக்கு இந்தியா வின் சிறந்த இசை அமைப் பாளர் விருதை மத்திய அரசு வழங் கியது.

அமெரிக்கா வின் டைம் பத்திரிகை, கடந்த நூற்றா ண்டின் உலகின் தலை சிறந்த 10 இசைக் கோர்வை களில் ஒன்றாக 'ரோஜா’வை அறிவித்தது. 'மெட்ராஸின் மொசார்ட்’ எனவும் பட்டம் சூட்டியது.

'பம்பாய்’ படத்தின் பாடல் கேசட்டுகள், அப்போதே 120 லட்சம் பிரதிகள் விற்றன. படத்தின் தீம் இசை, மூன்று வெவ்வேறு படங் களில் பயன் படுத்தப் பட்டது. இந்தச் சாதனை உலகின் வேறு எந்தப் படத்தி ற்கும் இல்லை.
1997-ல் இந்தியா வின் விடுதலைப் பொன் விழாவுக் காக உலகப் புகழ் பெற்ற சோனி நிறுவனம், ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது. அப்படி உருவானது தான் 'வந்தே மாதரம்’ இசை ஆல்பம்.

ரஹ்மானு க்கு பழையதை மறக்கிற பழக்கம் கிடையாது. எவ்வளவோ முன்னேறி னாலும் தான் முதலில் உபயோ கித்த கீபோர்டை இன்னமும் வைத்து இருக்கிறார் .இன்னமும் தன் பள்ளிக் கால நண்பர் களை சந்திக்கிற பழக்கம் உண்டு.

இளம் வயதில் வறுமை யில் வாடிய நினைவு களின் அடையாள மாக இன்னமும் தானாக

நகைகளை அணிய மாட்டார்

ஆஸ்கர் விருதுகள் வழங்கப் படுவதற்கு முன் எப்படி உணர்கி றீர்கள் என கேட்ட பொழுது "எனக்கொரு அன்னை இருக்கி ன்றாள்" என்றார்.அதாவது நான் 

இந்த விருதை வென் றாலும் அல்லது வெல்ல முடியாமல் போய் விட்டா லும் என் அன்னை யின் அன்பு மாறப் போவது இல்லை .அது போதும் எனக்கு என்றார் ரஹ்மான்

'அடுத்து ஆஸ்கர் தான்’ என 10 வருடங் களுக்கு முன்பே இயக்குனர் சுபாஷ் காய் சொன்னார். பிறகு, உலக அளவில் பம்பாய் ட்ரீம்ஸ் எனும் இசை நிகழ்ச்சி, மைக்கேல் ஜாக்சனோடு இணைந்து, 

'மைக்கேல் ஜாக்சன் அண்ட் ஃப்ரெண்ட்ஸ்’, சீன மற்றும் பிரிட்டிஷ் படங்க ளுக்கு இசை எனப் பல வாய்ப்பு களை வெற்றி களாக மாற்றினார். அப்படி வந்தது தான், 'ஸ்லம்டாக் மில்லியனர்’. 

ஒரே ஒரு மின் அஞ்சலில் ரஹ்மானை புக் செய்தார், இயக்குனர் டோனி பாயல். 'ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்கு ஆஸ்கர்கள் குவிய, 'எல்லாப் புகழும் இறை வனுக்கே’

எனப் பணி வோடு ஆஸ்கர் மேடையில் அன்னைத் தமிழில் பேசினார்.

அமைதி மற்றும் தனிமை விரும்பி. அமைதி ஆழ் மனதின் குரலை இன்னும் தெளிவாக கேட்க வைக்கிறது ; எரிச்சல்படுத்தும் சத்தம் உண்டு செய்யும் பலர் இருக்கும் உலகில் அமைதி தான் ஒரே இன்பம் என்பது ரஹ் மானின் எண்ணம்

'வெறுப் புக்குப் பதிலாக நான் அன்பு வழியைத் தேர்ந்து எடுத்தேன்’ என்பார். எல்லோ ரையும் அன்பு செய்யு ங்கள் எனும் சூஃபி தத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர். 

உலக அமைதி க்காக 'வி ஆர் தி வேர்ல்டு’ எனும் இசைப் பாடலை மைக்கேல் ஜாக்சன் இசை அமைக்கச் சொன்னார். அந்தப் பாடலைக் கேட்ப தற்குள், அவர் மரண மடைந்தது சோகமான நிகழ்வு.

ரஹ்மான் நன்றாக மிமிக்ரி செய்வார், வைரமுத்து போல மிமிக்ரி செய்வதில் விருப்பம் அதிகம். பெரும் பாலும் இரவு நேரங் களில் இசை அமைப்பார். வீட்டில் பிள்ளைகள் தூங்கும் வரை அவர்க ளோடு இருந்து விட்டு, 

பிறகு இசை அமைக்கப் போகிற ஸ்வீட் அப்பா. குழந்தை கள் மீது பெரிய அன்பு. ஒரு சுவாரசிய மான செய்தி. இவருக்கும் மகன் அமீனுக்கும் ஒரே தேதியில் தான்

பிறந்த நாள்.

ரஹ்மான் லதா மங்கேஷ் கரின் பெரிய விசிறி. "லதாஜி என்னு டைய இசைய மைப்பில் பாடினால் கேட்டுக் கொண்டே இருப்பேன் அது என்னு டைய இசை என்பதற் காக இல்லை ! 
அவர் பாடியி ருக்கிறார் என்பதால் அதில் மூழ்கிப் போவேன்" என்று சொன்னார். இசையை... ஏழை மற்றும் திறமை சாலி மாணவர் களிடம் கொண்டு போய்ச் சேர்ப்ப தற்கு, 

பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இசைப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். ''இந்தப் பள்ளியில் தான் என் கனவுகள் உள்ளன. இங்கே இருந்து சிறந்த பல இளைஞ ர்கள் வரவேண்டும் என்பதே என் ஆசை'' என்பார்.

வெற்றியை தலைக்கு போக விட மாட்டார். கொஞ்சம் புகழுடைய சாதாரண ,மனிதன் நான் என்பார். ஈகோ என்பதை 'edging god out !' என்று அர்த்தப் படுத்திக் கொள்கிறேன்.

வெற்றி மட்டுமே படைப்புத் திறனுக்கு காரண மில்லை. இசையின் ஒருமுகம் மற்றும் அதன் மீதான காதல் தான் என்னை செலுத்து கிறது. இறைவனின் எல்லை யற்ற கருணை யும் நான் இயங்க முக்கிய காரணம் !" என்பது ரஹ்மா னின் வாக்கு மூலம்.
Tags: