விஞ்ஞான வளர்ச்சியில் பாக்டீரியா வெடிகுண்டு !

வெடி குண்டு விஞ்ஞானம் வளர வளர ஆயுதங்களும் பெருகி வருகின்றன. ஒளியையும், காற்றையும் எதிர்காலத்தில் ஆயுதமாகப் பயன்படுத் துவார்கள் என்று பிரபல ஜோதிடர் நாஸ்டர் டாமஸ் கணித்துக் கூறி இருக்கிறார்.
விஞ்ஞான வளர்ச்சியில் பாக்டீரியா வெடிகுண்டு !
வளர்ந்து வரும் அறிவியல் நவீனங் களும் அதை உண்மைப் படுத்தும் விதத்தி லேயே ஆயுதங் களைக் குவித்து வருகின்றன.

சமீபத்தில் அமெரிக்கா, ஒளியை சிறிய அளவி லான ஆயுதமாக பயன் படுத்தும் யுக்தியை கண்டுபிடித்து உள்ளது. ஆனால் அது ராணுவ வீரர்களின் மருத்துவ உதவிக்கு பயன்படும் கத்தி என்று அமெரிக்கா அறிவித்தது.

இதே போல விதவித மான ஆயுதங்கள் பல நாடுக ளிடம் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர இருக்கிறது பாக்டீரியா வெடிகுண்டு.

பாக்டீரியா என்பது நுண்ணுயிரியாகும். இதில் சைனோ பாக்டீரியா என்ற ஒரு வகை பாக்டீரியாக்களில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தி பெட்ரோலியம் தயாரிக்கிறார்கள். 
இதே பாக்டீரியாவில் வேறு சில மாற்றங்களை ஏற்படுத்தினால் அது வெடிக்கும் தன்மை உடையதாக மாறி விடுகிறது.

அதாவது இந்த பாக்டீரியாவுடன், பாக்டீரியாபேஜ் எனப்படும் மற்றொரு வகை பாக்டீரியாக்களின் ஜீன்களைச் சேர்த்தால் அது இந்த மாற்ற த்தைப் பெறுகிறது.

பின்னர் அந்த பாக்டீரியாக்கள் `நிக்கல்’ என்ற உலோகத்தை நுகரும் வாய்ப்பு ஏற்பட்டால் வெடித்துச் சிதறுகிறது. எனவே இதனை சிறிய வெடி குண்டாக பயன்படுத்த முடியும். 

பாக்டீரியாக்கள் நுண் கிருமிகள் என்பதால் வேகமாகப் பரவும். 
அதில் இந்த மாற்றங்களைச் செய்து அனுப்பினால் எதிரிகளின் கோட்டைக்குள் எவ்வித பரிசோதனையிலும் சிக்காமல் உள்ளே நுழைந்து தாக்குதலை வெற்றிகரமாக முடித்து விடும். 

எனவே இது ஒரு ஆபத்தான ஆயுதமாக அவதாரம் எடுக்க இருக்கிறது.
Tags: