சசிகலா புஷ்பாவை கைது செய்ய தடை | Sasikala Pushpa ban to arrest !

அதிமுக வில் இருந்து டிஸ்மிஸ் செய்யப் பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவை கைது செய்ய உச்சநீதி மன்றம் அதிரடியாக தடை விதித் துள்ளது. 
மேலும் அக்டோபர் 3, 7-ந் தேதிகளில் சசிகலா புஷ்பா விசாரணை க்கு வரும் போது அவருக்கு உரிய பாதுகாப்பு தரவும் உச்சநீதி மன்றம் உத்தர விட்டுள்ளது. 

சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை செய்த பெண்கள் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப் படாமல் இருக்க

சசிகலா புஷ்பா அவருடைய லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப், தாய் கவுரி ஆகிய 4 பேர் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டது. 

இதை யடுத்து உச்சநீதி மன்றத்தில் சசிகலா புஷ்பா முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து சசிகலா புஷ்பாவை 6 வார காலத்து க்கு கைது செய்ய கடந்த மாதம் இடைக்கால தடை விதித்தது உச்சநீதி மன்றம்.

இந்த நிலையில் சசிகலா புஷ்பா மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடை பெற்றது. அப்போது சசிகலா புஷ்பாவை கைது செய்ய உச்சநீதி மன்றம் அதிரடியாக தடை விதித்தது. 

மேலும் அக்டோபர் 3 மற்றும் 7-ந் தேதிகளில் விசாரணை க்கு ஆஜராகும் சசிகலா புஷ்பாவு க்கு உரிய பாதுகாப்பு தரவும் உச்சநீதி மன்றம் உத்தர விட்டுள்ளது.
Tags: