தபால் நிலையங்களில் இனி பாஸ்போர்ட் விரைவில் அமல் !

விரைவாக பாஸ்போர்ட் பெற முடிய வில்லை எனவும், ஆன்லைனில் விண்ணப்பித்து 3, 4 மாதங்கள் கழித்தே நேர்காணலுக்கு அழைக்கப்படும் நிலை உள்ளது என 
தபால் நிலையங்களில் இனி பாஸ்போர்ட் விரைவில் அமல் !
தினமும் 2000 விண்ணப்பங்கள் வரை வருவதாலும் போதிய அளவு ஊழியர்கள் இல்லாததாலும் பாஸ்போர்ட் பெறுவதில் காலதாமதம் நீடித்து வருகிறது.

இதனால் தபால் அலுவல கங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்குவ தற்கான திட்டத்தை செயல் படுத்த வெளியுறவு துறை அமைச்சகம் முடிவு செய் துள்ளது. 

இந்த ஆண்டு இறுதிக்குள் இதனை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. இதன்மூலம் புதிதாக விண் ணப்பம் செய்பவர் களுக்கு விரைவாக பாஸ்போர்ட் வழங்க முடியும் என்று கருதப் படுகிறது.

தபால்துறை இதற்கான முயற்சி களை எடுத்து வருகிறது. டில்லியில் உள்ள முக்கிய தபால் நிலையங் களில் இந்த திட்டத்தை ஆண்டு இறுதிக்குள் தொடங் கவும் திட்ட மிட்டுள்ளது.
இத்திட்டம் வெற்றி கரமாக செயல்படும் பட்சத்தில் அனைத்து தபால் நிலையங் களிலும் பாஸ்போர்ட் வழங்குவ தற்கான பணிகள் தொடங்கும் என்று அதி காரிகள் தரப்பில் தெரிவிக்க ப்படுகிறது. 

தற்போது பாஸ்போர்ட் அலுவல கங்களில் ஏ, பி, சி என்ற 3 வகையில் விண்ணப்ப தாரர்களின் ஆவணங்களை சரிசெய்தல், புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற் கொள்ளப் படுகின்றன. 

இவற்றில் பி மற்றும் சி அளவில் நடைபெறும் பணிகள் மட்டும் தபால் துறை ஊழியர்களிடம் கொடுக்கப்பட உள்ளது. 
இதற்காக தபால் துறை ஊழிய ர்களுக்கு பயிற்சியும் அளிக்கப் பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு தபால் அலுவலகத்தில் 150 முதல் 200 விண்ணப் பங்கள் வரை பரிசீ லிக்கக் கூடும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
Tags: