பாலியல் தொழிலில் ஈடுபடும் அமைச்சர் !

பிரதமர் மோடியின் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக மகளிர் ஆணைய அதிகாரி ஒருவர் வெளியி ட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.
பாலியல் தொழிலில் ஈடுபடும் அமைச்சர் !
டில்லியில் நேற்று நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மகளிர் ஆணைய உயர் அதிகாரியான சுவாதி மாலிவல் என்பவர் தான் இந்த பகிரங்க குற்றச் சாட்டை வெளியி ட்டுள்ளார்.

அப்போது, பாலியல் தொழில் குறித்து விசார ணையை தொடங்கி யதில் இத்தொழிலில் கோடிக்க ணக்கான பணம் புரளுவதாக தெரிவித் துள்ளார்.

குறிப்பாக, பாராளு மன்றத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள GB சாலையில் பாலியல் தொழில் அமோக மாக நடைபெற்று வருகிறது.

இப்பகுதி யில் மட்டும் பாலியல் தொழில் மூலம் ஒருநாள் 5 கோடி வரை வருமா னம் ஈட்டப் படுகிறது. எனக்கு நம்பத் தகுந்த ஒரு ரகசிய தகவல் கிடைத் துள்ளது. 
அதில், மத்திய பாஜக அமைச்சர் ஒருவரும், டில்லியில் இருந்து செயல்படும் ஒரு முக்கிய கட்சியை சேர்ந்த அரசியல் வாதி ஒருவரும் GB சாலை யில் பாலியல் தொழிலை நடத்தி வருகின் றனர்.

இது குறித்து மேலும் விசார ணையை தீவிரப் படுத்தி யபோது எனக்கு மிரட்டல் கள் வந்தன. இப்போது என் மீது வழக்கு பதிவு செய்துள் ளதுடன், எனது பதவியை பறிக்க போவ தாகவும் மிரட்டல் கள் வந்துள்ளது.

இந்த வெற்று மிரட்டல் களை பார்த்து நான் அஞ்சப் போவது இல்லை. பாலியல் தொழிலில் கட்டாயப் படுத்தி ஈடுப் படுத்தப் படும் சிறுமிகளை நிச்ச யமாக மீட்பேன்.

8 முதல் 10 வயதுள்ள சிறுமிகளை இத்தொழிலில் ஈடுப்படுத்தி வருகின்றனர். 
இவர்களில் ஒவ்வொரு சிறுமியும் ஓர் இரவில் மட்டும் 30 நபர்களுடன் உறவுக் கொள்ள மிரட்டப் படுகின்றனர் என சுவாதி மாலிவல் தெரிவித் துள்ளார்.

பாஜக அமைச்சர் மீது சுவாதி சுமத்தியுள்ள பகிரங்க குற்றச்சாட்டை தொடர்ந்து, ஆணையத்தில் விதிமுறைகளை மீறி 

பெண்களை நியமித்த குற்றத்திற்காக சுவாதி மீது லஞ்ச ஒழிப்பு பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags: