தாம்பத்தி யத்தில் ஈடுபட்ட பிறகு விந்து வடிதல்.. ஏன்?

குழந்தை பெற வேண்டி ஆவலாய் தாம்பத்தி யத்தில் ஈடுபடும் நபர்களு க்கு சின்ன சின்ன விஷயங் களில் கூட சந்தேகங்கள், அச்சங்கள் ஏற்படும்.

இதில் இவர்கள் செய்யும் தவறு என்ன வெனில், மனதில் எழும் சந்தேகங் களை உரிய நிபுணரிடம் கேட்காமல், தங்களுக் குள்ளேயே அச்சமாக வளர விடுவது தான். அப்படி தம்பதிகள் மத்தியில் பொதுவாக காணப்படும் அச்சம் தான் இது.

உடலுறவில் ஈடுபட்ட பிறகு, விந்தணு பெண்ணு றுப்பில் இருந்து வெளி வருவது அல்லது வடிவது சரியா? தவறா? இவ்வாறு நேர்வதால் கருத்தரி க்கும் வாய்ப்பு குறையுமா?

இயல்பு!

தாம்பத்தியம் மற்றும் கருத்தரிப்பு மருத்துவ துறையை சார்ந்த நிபுணர்கள், தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பிறகு இவ்வாறு நடப்பது இயல்பு தான். இதை எண்ணி வருத்தப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.

விந்து!

பொதுவாக ஒரு ஆணிடம் இருந்து வெளிப்படும் விந்து 20 - 400 மில்லியன் எண்ணிக்கை அளவில் வெளியாகிறது. இதில் ஒன்று தான் கருத்தரிக்க உதவுகிறது.

விந்து வடிதல்!

தாம்பத்தி யத்தில் ஈடுபட்ட பிறகு பெண்ணு றுப்பில் இருந்து விந்து வெளி வருவது அல்லது வடிவது சகஜம். முழுக்க விந்து வெளி வருவது இல்லை. பெண்ணு றுப்பில் இருக்கும் விந்து கருப்பை வாய் நோக்கி பயணித்துக் கொண்டு தான் இருக்கும்.

கருமுட்டை குழாய்கள்!

ஆணின் விந்து பெண்ணு றுப்பில் இருந்து கருப்பை வாய், கருப்பை மூலமாக கருப்பை குழாய் களை சென்றடை கின்றன. கருப்பை குழாய் மூலமாக தான் விந்து முட்டையை சென்றடை கிறது.

படுக்கும் நிலை!

கருத்தரிக்க வேண்டும் என என்னும் பெண்கள்.தாம்பத்திய த்தில் ஈடுபட்ட உடனே படுக்கை யில் அப்படியே கால்களை நீட்டி படுத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இதை கண்டு நீங்கள் அச்சம் கொள்ளவும் வேண்டாம். விந்து வடிவதால் கருத்தரிக் கும் வாய்ப்பு குறைந்து விடாது.
Tags: