முதலிரவில் நடந்ததை விளக்கும் பெண் ஆடியோ கசிவு !

முதலிரவின் போது தனது கணவர் தன்னிடம் நடந்து கொண்டதை ஒரு பெண் தனது ஆண் நண்பரிடம் விளக்கும் ஆடியோ ஒலிப்பதிவு வெளியாகி தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. 
சைபர் கிரைம் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. ஹோட்டல்களில் பெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோவில் பதிவு செய்து வெளியிடும் சம்பவங்களை முன்பு கண்டது தமிழகம். 

குறிப்பாக நடிகை திரிஷாவின் குளியலறைக் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சமீபத்தில், காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் பூசாரி தேவநாதன், 

பல்வேறு பெண்களுடன் கோவில் கருவறையில் அசிங்கமாக நடந்து கொண்டது செல்போன் கேமராவில் படம் பிடிக்கப்பட்டு வெளியாகி தமிழகத்தை உலுக்கியது.

இதேபோல தங்களது காதலிகளுடன் அந்தரங்கமாக இருந்த்தை செல்போன் கேமராவில் பதிவு செய்து வெளியிட்ட காதலர்களின் செயல்களையும் தமிழகம் முன்பு கண்டிருந்த்து. 

இந்த நிலையில் தனது தோழியின் முதலிரவுக் காட்சிகளை அவர் வாயாலேயே சொல்ல வைத்து அதை டேப் செய்து வெளியிட்டுள்ளார் ஒரு நபர். 

குமரி மாவட்டத்தில் இந்த ஆடியோ ஒலிப்பதிவு வெளியாகி வலம் வந்து கொண்டுள்ளது. அந்த இருவருக்கும் இடையே நீண்ட காலமாக காதல் இருப்பது போல தெரிகிறது. 

கல்யாணத்திற்குப் பின்னர் தனது முதலிரவு அனுபவத்தை அந்த ஆண் நண்பரிடம் படு இயல்பாக விவரித்துள்ளார் அந்தப் பெண். கணவர் தன்னிடம் எப்படி நடந்து கொண்டார்,

எங்கெல்லாம் தொட்டார் என்பதையெல்லாம் அந்தப் பெண் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் விவரித்துள்ளார். அந்தப் பெண்ணுக்குத் தெரியாமலேயே அவரது பேச்சை டேப் செய்துள்ளார் அந்த நண்பர் என்று தெரிகிறது. 

முதலிரவுக் காட்சிகள் குறித்து அந்த ஆண் நண்பர் பெண்ணிடம் கேட்கிறார். முதலில் மறுக்கும் அவர், பின்னர் படு சகஜமாக அதை விவரிக்கத் தொடங்குகிறார். கொஞ்சமும் தயக்கம் இல்லாமல், கூச்சம் இல்லாமல் அந்தப் பெண் அந்தரங்க காட்சிகளை விவரித்துப் பேசியுள்ளார். 

மேலும் தனது நண்பர் கேட்ட சந்தேகங்களையும் தீர்த்து வைத்தும் பேசியுள்ளார் அப்பெண். கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் இந்த ஆபாச டேப் ஓடுகிறது. இதுகுறித்து போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Tags: