நாளை காலை முதல் சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம் !

பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை தொடங்குகிறது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனவரி 17ம் தேதி காலை 5.30 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
ஜனவரி 16ம் தேதி மதியம்12.30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் புறப்படும். 

ஜனவரி 16 இரவு 10 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து மங்களுருவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஜனவரி 22ம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும். 

ஜனவரி 24ம் தேதி இரவு 7 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்குகிறது. 
Tags: