அரிப்பு நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி !

0
அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்து விட்டால் நம்மை எச்சரிக்கை மணி அடிக்கும் அறிகுறி தான் அரிப்பு.
அரிப்பு நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி !
நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிற ஓர் எதிர்வினை இது. 

இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறி விடும். 

உடலியல் ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’. 

எதிர்ப்புப் புரதம் அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம் தான். இதை ‘இம்யூனோ குளோபுலின்–ஈ(IgE) என்பர். 

இப்புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல் முறையாக உடம்புக்குள் நுழையும் போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும். 

மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும் போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். 

இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும்.
சயனைட் கொலையாளி வைத்தியராய் - விசித்திரமான விஞ்ஞானி !
இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால் தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன. 
பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கி விடுவோம். 

சொறியச் சொறிய அரிப்பு கொஞ்சம் குறைந்தும் விடுகிறது. எப்படி? ‘லேன்ட் லைன்’ போன் வேலை செய்யும் மெக்கானிஸம் போன்றது இது. 

லேன்ட்லைன் போனில், எதிரெதிர் முனைகளில் உள்ளவர்களை இணைப்பது ஒரே ஒரு கம்பி தான். எனவே, ஒரே நேரத்தில் ஒரே எண்ணில் இரண்டு பேர் தான் பேச முடியும். 

இது போல், அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளைக்கு எடுத்துச் செல்வதும், மூளையிலிருந்து சொறிய வேண்டும் என்ற கட்டளையை விரல்களுக்கு எடுத்து வருவதும் ஒரே ‘நரம்பு கேபிள்’ தான். 

நாம் சொறிய ஆரம்பித்ததும், சொறி கிற உணர்வையும் இந்த நரம்பு தான் மூளைக்கு எடுத்துச் செல்கிறது. 

ஒரு நேரத்தில் ஒரு தகவலை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச் செல்லும் என்பதால், அரிப்பு உணர்வை மூளைக்கு 

எடுத்துச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு, சொறியும் உணர்வை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச் செல்கிறது. 
அரிப்பு நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி !
இதனால் அரிப்பு குறைகிறது. என்ன காரணம்? அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். 

உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை. வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். 

சோப்பு, சென்ட், குங்குமம், தலைச் சாயம், உதட்டுச் சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக் கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். 

சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத்தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்து விடும். 

குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும். 

ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக் கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். 

இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்கநகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, ‘நிக்கல்’ வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். 

துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது. 
அப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப் போகிறது. இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க்கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. 
இதற்குக் ‘கரப்பான் நோய்’ (Eczema) என்று பெயர். இது வந்து விட்டால் நாள் முழுவதும் அரிப்பை ஏற்படுத்தும். குளிரும் ஆகாது! சிலருக்கு வெயிலும் குளிரும் கூட அரிப்பை ஏற்படுத்தும். 

வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்கள் அலர்ஜி யாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். 

குளிர் காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத்தோல் வறண்டு அரிப்பு உண்டாகும்.  அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. 

இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.

தொடை இடுக்கு அரிப்பு காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில் தான் மிகத் தீவிரமாகும். 

அரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த இடத்தில் அகலமாகப் படைபோலத் தோன்றும். 

கால்விரல் இடுக்குகளில் வருகிற சேற்றுப் புண்ணும் அரிப்பை ஏற்படுத்துகிற ஒரு காரணி தான். தண்ணீரில் அதிகம் புழங்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இந்தத் தொல்லை இருக்கும். 

அடுத்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி… இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு தொல்லை கொடுக்கும். 
இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்து கொண்டால், ‘தோல் மடிப்பு நோய்’ (Intertrigo) தோன்றும். இதுவும் அரிப்பை அதிகப்படுத்தக் கூடிய ஒரு நோய் தான். 

இவை தவிர பேன், பொடுகு, தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத்தும். 
எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்து போ வது போன்ற தொந்தரவுகள் ஏற்படும். 

வயதானால் வரும் அரிப்பு முதுமையில் வருகிற அரிப்புக்கு வேறு காரணம் இருக்கிறது.

வயதானவர் களுக்குத் தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைவதால், தோலில் வறட்சி ஏற்பட்டு அரிப்பை ஏற்படுத்து கிறது. சிலருக்கு அருவியில் குளித்து முடித்ததும் அரிப்பு ஏற்படும். 

எச்சரிக்கும் நோய்கள் உடலில் இருக்கும் எந்த வொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. 

உதாரணம்: சொத்தைப்பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. 
அரிப்பு நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி !
ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு ‘நூல் புழு’ காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். 

உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம். 
தவிர, நீரிழிவு நோய், ரத்த சோகை, மஞ்சள் காமாலை, சிறு நீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சனை, பித்தப்பைப் பிரச்சினை, 

‘மல்ட்டிபிள் ஸ்கிலி ரோஸிஸ்’ எனும் மூளை நரம்புப் பிரச்சனை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம். 

உணவும் மருந்தும் நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக் கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும்.

முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல்மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்ற வற்றைச் சொல்லலாம். 

வெளிநாட்டு ப் பதப்படுத் தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். 

உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். 

குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 

இதன் காரணமாகத் தான் முதன் முதலில் ஆன்ட்டி பயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம். 

மனப் பிரச்சினைகள் அரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. 

‘ஹிஸ்டீரியா’ என்ற மனநோய் உள்ளவர்கள் உடலில் பூச்சி ஊறுவதைப் போல் கற்பனை செய்து கொள்வார்கள். இதனால் எந்நேரமும் உடலைச் சொறிந்து கொண்டே இருப்பார்கள். 

இவர்களது மன நோய் குணமானால் தான் அரிப்பும் சரியாகும். ‘உடம்பு அரித்தால் ஒரு ‘அவில்’ போட்டுக்கோ’ என்று சாதாரணமாக வீடுகளில் சொல்வார்கள். 
அரிப்பு நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி !
அதேவே ளையில் எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்து கொண்டு சிகிச்சை பெற்றால் தான், அரிப்பு முற்றிலுமாகக் கட்டுப்படும். நாமாக மருந்து சாப்பிடுவது, ஆபத்துக்கு அழைப்பு விடுப்பதைப் போல. 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)