இனியாவது மதுக்கடைகள் மூடப்படட்டும்.. சசிபெருமாள் மனைவி!





இனியாவது மதுக்கடைகள் மூடப்படட்டும்.. சசிபெருமாள் மனைவி!

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
தமிழகத்தில் இனியாவது மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று மறைந்த சசிபெருமாளின் மனைவி உருக்கமாக தெரிவித்து உள்ளார்.
மறைந்த காந்தியவாதி சசிபெருமாளின் மனைவி மகிளம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''என் கணவர் இறந்த தகவல் டி.வி.யை பார்த்த பிறகு தான் எனக்கு தெரியும். டி.வி.யில் அவரது உடலை பார்த்ததும் நான் கதறி அழுதேன்.

அவர் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். அவரது இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. என் கணவர் காலையில் என்னை செல்போனில் தொடர்பு கொண்டார்.

அப்போது அவர், நான் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணா மலைக்கடை என்ற கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டம் நடந்த செல்கிறேன். நாளை வீட்டிற்கு வந்துவிடுவேன் என்றார்.

மேலும், மகள் கவியரசி பள்ளிக் கூடத்திற்கு சென்று விட்டாளா? அவள் எப்படி இருக்கிறாள் என்று விசாரித்தார். எனது கணவர் தனது வாழ்நாள் முழுவதும் மது ஒழிப்புக்காகவே பாடுபட்டார்.

போராட்டம், போராட்டம் என்று வீட்டிலேயே தங்க மாட்டார். மது ஒழிப்புக்காக அவர் தனது உயிரையே தந்துவிட்டார். தமிழகத்தில் இனியாவது மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்.

அவரை இழந்த நான் எனது மகளை எப்படி வளர்க்கப்போகிறேன் என்று தெரியவில்லை" என்று கதறி அழுதார்.
Tags: