குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள் என்ன?

உடல் உறுப்புகள் அனைத்தையும் சீரழிக்கும் தன்மை புற்று நோய்க்கு உண்டு என்கிறார் அப்பல்லோ மருத்துவ மனையின் புற்று நோய் நிபுணர் டாக்டர் ராஜா. 
 குடல் புற்று நோய்க்கான அறிகுறி


புற்று நோய் அறிகுறிகள், அவற்றின் தன்மை குறித்து இதோ அவரே விளக்குகிறார்...

புற்று நோயின் பாதிப்பு வயிறு, தொண்டை, மார்பகம், கல்லீரல், குடல்... என அனைத்து உறுப்பிலும் ஏற்படும். இந்த நோய் ஏற்பட பல காரணங்கள் சொல்லாம்.

அவை புற்று நோய் பாதிக்கும் உறுப்பை பொறுத்து அமையும். குடல் மற்றும் மலக் குடலில் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் முறையற்ற உணவு பழக்கம். இது மட்டுமே காரணி என்று சொல்ல முடியாது.

மரபணு, பரம்பரை... என பல அம்சங்கள் புற்றுநோய் தோன்று வதற்கான காரணங் களாய் இருக்கின்றன.

பொதுவாவே புற்றுநோய் பாதிப்பை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மருந்து மாத்திரைகள் கொண்டே குணப் படுத்த முடியும்.

ஆனால் நோய் முற்றிய நிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிய வரும் போது குணப் படுத்தும் சாத்தியம் மிகவும் குறைவு. 
நோய் முற்றிய நிலை


காரணம் குடல் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். ஆனால் இந்த பிரச்னை மிகவும் சாதாரண மானது.

வயிற்று பிரச்னை இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும் என்பதால், டாக்டரின் ஆலோசனை பெற தவறி விடுகிறார்கள். 

காலம் கடந்த பிறகு புற்றுநோய் கண்ட றிந்தால், அந்த கட்டத்தில் மருந்து மாத்திரையில் இதனை கட்டுப் படுத்த முடியாது.

அறுவை சிகிச்சை ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி மூலம் ஓரளவு கட்டுப் படுத்த முடியும். குடல் புற்றுநோய் பொதுவான பெயர் என்றாலும் அவை ஒவ்வொரு வருக்கும் மாறுபடும். 

எல்லாருக்கும் அவரவர் உடல் நிலை, மரபணுக்கு ஏற்ப நோய் கிருமிகள் மாறுபடும். இருப்பினும் தற்போது மருந்து மாத்திரை, ரேடியேஷன், கீமோதெரபி என ஒரே மாதிரியான சிகிச்சை முறைகளை கடைப் பிடித்து வருகிறோம்.
குடல் புற்று நோய்


அதே சமயம் நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்து மாத்திரைகள் மற்றும் சிகிச்சை முறையில் சில மாற்றங்கள் ஏற்படுமே தவிர ஒவ்வொரு வருக்கும் தனித்தனி மாத்திரை களை கொடுக்க முடியாது.

ஆனால் இன்னும் பத்தாண் டுகளில் மருத்துவ துறையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பதில் சந்தேக மில்லை. புற்று நோயை ஆரம்ப காலத்தில் கண்டு பிடிப்பது மிகவும் அரிதான விஷயம்.

அதற்கு காரணம் நம் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், அவற்றை நாம் அலட்சியப் படுத்து விடுகிறோம். 

நோய் கிருமிகள் உடலில் பரவிய பிறகு டாக்டரின் உதவியை நாடி செல்கிறோம். குடல் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.

மலம் கழிக்கும் போது ரத்தப்போக்கு இருக்கும். மலச்சிக்கல், மலம் கழிக்கும் போது வலி, திடீரென்று உடல் எடை குறைதல் 

போன்ற பிரச்னைகள் இருந்தால் உடனடி யாக டாக்டரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
Tags: