உடல் உறுப்புகளில் பற்களை பாதுகாப்பது அவசியம் !

உடல் உறுப்புகளில் பற்களை பராமரிப்பது மிகவும் முக்கியமானது. பற்கள் நன்கு சுத்தமாக இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பிரஷ் பண்ண வேண்டும்.
உடல் உறுப்புகளில் பற்களை பாதுகாப்பது அவசியம் !
இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம், பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்ளுதல், சொத்தை பற்கள் ஏற்படுதல் போன்றவை ஏற்படாமல் இருப்பதோடு, 

பற்களும் பளிச்சென்று இருக்கும். பற்களில் பிரச்னைகள் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளே காரணமாகின்றன.

ஆகவே உண்ட பின், பற்களில் மாட்டிக் கொள்ளும் உணவுப் பொருட்களை நீக்க டூத் பிக் அல்லது டென்டல் ப்ளாஸ் பயன்படுத்துவது நல்லது.

பற்களுக்கு சிக்கலை உண்டாக்கும் உணவுப் பொருட்களில் சில உங்கள் கவனத்திற்கு…

உணவுகளில் வித்தியாசமான சுவைக்காக சேர்க்கும் பால் பொருட்களில் ஒன்று தான் சீஸ். இதை சாப்பிடும் போது அவை பற்களில் சிக்கிக் கொண்டு,
பற்களை சொத்தை ஆக்குவதோடு, வாய் துர்நாற்றத்தை யும் உண்டாக்குகிறது. சாக்லேட் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. சாக்லேட் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆனால் அதில் உள்ள இனிப்பு பற்களில் கிருமிகள் மற்றும் பக்டீரியாக் களை தங்க வைக்கும். அதனை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

மேலும் சாப்பிட்ட பின் பற்களை மறக்காமல் பிரஷ் செய்து விட வேண்டும்.
பாப்கார்ன் பற்களுக்கிடையே சுலபமாக மாட்டிக் கொள்ளும். 

அதனை நீக்குவது கடினமானது. அதனை நீக்க டென்டல் ப்ளாஸ் தான் பயன்படுத்த வேண்டும். அதிக நார்ச்சத்து நிறைந்துள்ள பிரட் கூட பற்களில் மாட்டும் உணவுப் பொருட்களில் ஒன்று. 

இது வறட்சியுடன் இருப்பதால், ஈறுகளில் மாட்டிக் கொண்டு, வாய் துர் நாற்றத்தை ஏற்படுத்தும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்திழுக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றான நூடுல்ஸ் கூட பற்களில் மாட்டிக் கொண்டு, நீண்ட நேரம் இருந்தால் பாக்டீரியாவை அதிகரிக்கும்.
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் இறைச்சியை நன்கு கடித்து இழுக்கும் போது, அதில் உள்ள சிறிய பகுதி கண்டிப்பாக பற்களில் மாட்டிக் கொண்டு அதிக எரிச்சலை ஏற்படுத்தும். 

ஆகவே எப்போது அதனை சாப்பிட்டாலும், டென்டல் ப்ளாஸை பயன்படுத்துவது நல்லது.
Tags: