பதநீர் எப்படி உருவாகுகிறது என்ற ரகசியம்? தெரியுமா?





பதநீர் எப்படி உருவாகுகிறது என்ற ரகசியம்? தெரியுமா?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
பனமரத்துக்கு கீழநின்னு பாலக் குடிச்சாலும் கள்ளுன்னு தான் நெனைப்பாக’ என்ற சொல்,  இன்றளவும் உண்மை தான். 
பதநீர் எப்படி உருவாகுகிறது என்ற ரகசியம்? தெரியுமா?
இதனாலேயே கள் இறக்க தடை இருந்த போதிலும், அதில் சுண்ணாம்பு சேர்த்து, பதநீராக தந்து கொண்டி ருக்கின்றனர்.

உடலுக்கு குளிர்ச்சியும், வலிமையும், ஊட்டச்சத்தும் நிறைந்த பதநீரின் தயாரிப்பு சுவாரஸ்யமானது.

மதுரை மேலூர் அருகே ஓவா மலையில், ஓங்கி வளர்ந்த பனை மரங்களில் இருந்து ஆண்டு முழுவதும், பதநீர் இறக்குகின்றனர்.

அந்த காலத்தைச் சேர்ந்தவர் களுக்கு பதநீர் எப்படி உருவாகுகிறது என்ற “ரகசியம்’ தெரியும்.

ஆனால் இக்கால தலை முறையினருக்கு தெரியவாய்ப் பில்லை. அதை விளக்குகிறார், 

20 ஆண்டுகளாக ஊர் ஊராக சைக்கிளில் பதநீர் விற்கும் மேலூர் ராஜ். பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக.

பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். 

இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி. சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டி விட்டுடுவாங்க.
இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும் போதே பதநீர் தயார். இதை லிட்டர் 10 ரூபாய்க்கு வாங்கி, 20 ரூபாய் வரை விற்கிறேன்.

இந்த பனைமர பதநீரை விட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்ச முடியாது. இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்;

பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன் தான்.

பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்”, என்றார். 

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பல விதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. 

பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. 

இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
பதநீர் எப்படி உருவாகுகிறது என்ற ரகசியம்? தெரியுமா?
கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது.

இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். 

இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்து கிறது.

என்ன தான் கூல்டிரிங்ஸ் இருந்தாலும், இயற்கையாக குளிர்ச்சியும், வலிமையும் தரும். 

எங்களுக்கு என்றுமே அழிவில்லை என்று ரோட்டில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் பனை மரங்கள்... கனேஷ்மூர்த்தி
Tags: