ஈரானின் அதி நவீன செயற்கைக் கோள் தொழில்நுட்பம் !

அமெரிக்கா இது வரை கண்டிராத அதிர்ச் சியை ஈரான் கொடுத் துள்ளது. அமெரிக்கா வின் அதி நவீன ஆளில்லா உளவு பார்க்கும் விமானம் ஒன்றை கடந்த வாரம் தாம் சுட்டு வீழ்த்தி யதாக ஈரான் அறிவித்தது.
ஈரானின் அதி நவீன செயற்கைக் கோள் தொழில்நுட்பம் !
ராடர் திரையில் விழாமல் தன்னை உரு மறைத்துக் கொண்டு பறக்கத் தக்க இந்த விமானம் தான் இருக்கும் இடத்தை வேறு இடத்தில் இருப்பது போன்ற பொய்யான தோற்றப் பாட்டையும் மேற் கொள்ள வல்லது.

அதுமட்டு மல்லாது அதி நவீன கண் காணிப்புப் கருவிகளைக் கொண்டுள்ள இவ்விமானம் தரையில் இருந்து வரும் ஆபத்துக் களையும் அறிந்து அதற்கு ஏற்றால் போல தனது பறக்கும் திறனை மாற்ற வல்லது.

இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்த முடியும் என்பதே பெரும் கேள்விக் குறியாக இருக்கும் நிலையில் அதனை ஈரானிய இராணு வத்தினர் பத்திரமாகத் தரையிறக் கியுள்ளனர் என்ற செய்தி தற்போது கசிந் துள்ளது.

இவ்விடையம் ஏற்கனவே அமெரிக்கா வுக்குத் தெரிந்திருக்க வேண்டும் ஆனால் அவர்கள் வாயே திறக்க வில்லை காரணம் ஈரான் தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தி யதாக அறிவிக்க அப்படியே இருக்கட்டும் என அமெரிக்க விட்டு விட்டது.

விமானம் சுடப் பட்டால் அது தரையில் வந்து விழும் போது சிறிய அளவிலாவது சேதம் ஏற்படும். 

ஆனால் சுட்டு வீழ்த்தி யதாகச் சொல்லப் படும் விமான த்தை ஈரான் காட்டும்போது அதனைப் பார்த்து உலகமே ஒரு கணம் ஆடிப்போய் விட்டது.
காரணம் அதில் எந்தச் சேதமும் இல்லை. (மிகமிகக் குறைந்த ஒரு சேதத்தைத் தவிர) அப்படி என்றால் விமானத்தை எவ்வாறு ஈரான் இராணு வத்தினர் கைப்பற்றினார்கள் என்பது பெரும் கேள்விக் குறியாக இருந்தது. 

ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத் துள்ளது. மேற்கொண்டு படியுங்கள்.

இந்த விடயத்தை சம்பவ தினமன்று குறிப்பிட்ட விமானம் (RQ - 170) அப்கானிஸ்தான் வான் பரப்பில் பறப்பது போன்ற தோற்றப் பட்டை கொடுத்துக் கொண்டு பறப்பில் ஈடு பட்டுள்ளது.

அமெரிக்கா சொல்கிறது அவ்விமானம் சிலவேளை ஈரானின் எல்லைப் பகுதிக்குள் தற்செய லாகச் சென்றிரு க்கலாம் என்று. 

ஆனால் அந்த விமானம் ஈரான் நாட்டிற்குள் சுமார் 200 கிலோ மீட்டர் வரை ஊடுருவிச் சென்று வேவு பார்த்துள்ளது என்பதே உண்மையாகும்.

குறிப்பிட்ட விமானம் உள்வாங்கும் GPS சமிஞ்சை களை ஈரான் அவதானித்து அதனை வைத்து அந்த ஆளில்லா விமானத்தை ஏமாற்றி யுள்ளது. புரிய வில்லையா ?

அதாவது இந்த அதி நவீன ஆளில்லா விமானம் செயற்கைக் கோளில் இருந்து வெளியாகும் சில சமிஞ்சை களை வைத்தே தனது (பாதை) பயணத்தை உறுதிசெய்கிறது.
அச் சமிஞ்சைகள் சிலவேளை கிடைக்க வில்லை என்றால் அது தானாகவே ஆட்டோ பைலட் (தானாகப் பறக்கும் திறனுக்கு) மாறும்.
ஈரான் முதலில் ஒரு வகையான ஒலிக்கற் றைகளைப் பாவித்து செயற்கைக் கோளின் சமிஞ்சை களைத் தடை செய் துள்ளது. 

அவ்விமானம் உடனே ஆட்டோ பைலட் சிஸ்டத்துக்கு தன்னை மாற்றி பறப்பில் ஈடுபட ஆரம்பித் துள்ளது.

இவ்வாறு பறப்பில் இருந்த விமான த்தின் கருவி களோடு உடனடித் தொடர்பை ஏற்படுத்திய ஈரான் இராணு வத்தினர் விமானத்தில் ஏற்கனவே பதியப் பட்டிருந்த வரை படங்களை மாற்றி யுள்ளனர்.

உலக வரை படங்கள் சிலவற்றை மாற்றி அதனை அந்த விமான த்தின் மெமரியில் பதித்து ள்ளனர். 

புதிதாகப் பதிக்கப் பட்ட மெமரியில் அந்த விமானம் இறங்க வேண்டிய இராணுவத் தளம் ஈரானின் ஒரு விமான நிலையம் எனக் குறிக்கப் பட்டுள்ளது.

அந்த விமானத்தைப் பொறுத்த வரை ஈரான் நாடு தான். தான் தரையிறங்க வேண்டிய கடைசி விமான நிலையம் என அது நினைத்துள்ளது. 

(அதாவது பாக்கிஸ்தான் இல்லையேல் அக்பானிஸ்தான் என்று அது நினைத்து ஈரானில் தரையி றங்கத் தயரானது).
இந்த விமானத்தை அது வரை கட்டுப் பாட்டில் வைத்திருந்த சி.ஐ.ஏ உளவு நிறுவனம் அதன் கட்டுப் பாட்டை சில நிமிடங்கள் இழந்தது. 

அதனைச் சாதகமாகப் பயன் படுத்திய ஈரான் அந்த ஆளில்லா விமானம் இறங்க வேண்டிய குறியீடு களை தாம் ஏற்கனவே ஏற்படுத் தியிருந்த தொடர்புகள் மூலம் உட்செலுத் தியுள்ளது.

பறக்கும் அவ்விமான த்தின் உயரத்தை அவசரமாக கணக்கிட்ட அவர்கள் எத்தனை ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அது தரையிறங்க வேண்டும் என அறிவித்தல் சமிஞ்சைகளை விடுக்க 

அவ்விமானம் தனது சொந்த விமான நிலையத்துக்கு தாம் வந்து விட்டதாகக் கருதி தரையிறங் கியுள்ளது.

இருப்பினும் எல்லா வற்றையும் படு கச்சித மாகச் செய்த ஈரானின் இராணுவ வல்லு னர்கள் சிறிய பிழை ஒன்றை மட்டும் விட்டு விட்டனர். 

விமானத் திற்க்கும் ஓடு தளத்திற்கும் இடையே உள்ள தூரத்தை துல்லி யமாக அவர்கள் கணக்கிட வில்லை.

அதனால் அமெரிக்க விமானம் தரையிற ங்கும் போது மெதுவாக இறங்க வில்லை. சற்றுக் கடினமான முறையில் தரை யிறங்கி மிகச்சிறிய காயங்க ளுக்கு உள்ளா கியுள்ளது அவ்வளவு தான். 

ஆனால் இது ஈரானின் பாரிய வெற்றி யாகக் கருதப்படுகிறது. உலகில் உள்ள பல நாடுகளுக்கு மேல் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு நோட்டம் இட்டுள்ளது. 

இவ்விமானம் ரஷ்ய வான் பரப்பில் கூட பறந்து அங்கும் மண்ணைத் தூவி திரும்பி யுள்ள நிலையில்
இதனை ஈரான் எவ்வாறு துல்லிய மாகக் கண்டு பிடித்து சுட்டு வீழ்த்தாமல் தரையிறக் கியுள்ளது என்பது பெரும் சந்தேகங் களைத் தோற்று வித்துள்ளது.

இதனை விடப் பெரிய விடையம் என்ன வென்றால் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு ஈரான் நாட்டி ற்குள் வந்த சில நிமிடங் களில் எல்லாம் 

ஈரான் இராணுவ வல்லு னர்கள் கடுகதி வேகத்தில் எவ்வாறு செயல் பட்டார்கள் என்பது தான் தெரிய வில்லையாம்.

இவ்விமானம் குறித்து ஏற்கனவே ஈரான் பல தகவல் களைத் தெரிந்து வைத்திரு க்கிறதா என்ற சந்தேகங் களும் எழுந்துள்ளது. அமெரிக்கா வின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் தற்போது ஆழ்ந்த யோசனை யில் உள்ளது.

இதற்கான பதிலடியை ஈரானுக்கு எவ்வாறு கொடுப்பது என்பது அமெரிக்கா வின் அடுத்த சவாலாக இருக்கும் என எதி ர்பார்க்கப் படுகிறது.
இது ஒருபுறம் இருக்க கைப்பற் றப்பட்ட விமானத் தில் இருந்து அமெரிக்கா வில் உள்ள தேசிய பாதுகாப்பு கம்பியூட் டர்களை அல்லது உளவு நிறுவன த்தின்

கம்பியூட் டர்களைத் தொடர்பு கொள்ள முடியும் என்பத னால் அனைத்துச் சேனல்க ளையும் அமெரிக்க பென்டகன் பாதுகாப்பு மையம் தற்போது முடக்கி யுள்ளதாம்.
Tags: